Site icon ilakkiyainfo

மீரா ஜாஸ்மின் திருமணத்தில் திடீர் சிக்கல்

ரன், ஆய்த எழுத்து,சண்டக் கோழி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் மீரா ஜாஸ்மின். இவருக்கும் மாண்டலின் ராஜேஷுக்கும் காதல் மலர்ந்தது. திருமணம்வரை சென்ற இந்த காதல் விவகாரம் பின்னர் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் மீரா ஜாஸ்மினுக்கும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைடஸுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக 2 நாள்களுக்கு முன்பே இவர்களது திருமணம் முறைப்படி சிறப்பு விதிகள் மூலம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

இன்று  கிறிஸ்தவ முறைப்படி   திருவனந்தபுரத்தில் உள்ள சர்ச்சில் திருமணம் நடக்கிறது.  இந்நிலையில் மணமகன் அனில் போலீசில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார்.

அதில், மீரா ஜாஸ்மினுடன் இன்று எனக்கு திருமணம் நடக்கிறது. இதை பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் தடுக்க முயல்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடமிருந்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பெங்களூர் பெண்ணுடன் அனிலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதாகவும், தனக்கு தெரியாமல் அவர் மீரா ஜாஸ்மினை மணக்க உள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெங்களூர் பெண் கூறி வருவதாக தெரிகிறது. இதனால் மீரா ஜாஸ்மின் திருமணத்தில் திடீர் சர்ச்சை ஏற்பட்டிருப்பதுடன் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் நடிகை அனன்யாவின் திருமணம் நடந்தபோதும் மணமகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version