பேஸ்புக் காதல் விவகாரம் ஒன்று காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
தினேஷா திலக் ஷி என்ற குறித்த யுவதி எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தேயிலை தொலிற்சாலை ஒன்றில் தொழில் புரிந்துவந்துள்ளார். இதனிடையே பேஸ்புக் மூலமாக அவருக்கு ஜா எல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தினேஷா சுமார் ஆறு மாத காலமாக காதல் தொடர்பொன்றை வளர்த்து வந்துள்ளார்.
தனது பேஸ்புக்கில் சுயவிபர புகைப்படத்துக்கு பதிலாக மொடல் அழகி ஒருவரின் புகைப்படத்தை இட்டே குறித்த யுவதி இந்த காதல் தொடர்பை வளர்த்து வந்துள்ளார்.
இந் நிலையில் நேற்று குறித்த யுவதியின் வீட்டுக்கு காதல் தொடர்பை பேணிய இளைஞரும் அவரது குடும்பத்தினரும் பெண்கேட்டு வருகை தந்துள்ளதுடன் புகைப்படத்தில் உள்ள யுவதியின் புகைப்படம் போலியானது என்பதை உணர்ந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த யுவதி இன்று பகல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தாய் வேலைக்கு சென்றிருந்த போது, தனது ஏனைய இரு சகோர்தரிகளும் வீட்டில் இல்லாத போதே குறித்த யுவதி இந்த தற்கொலையை செய்துகொன்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில் சடலமானது தர்போது பிரேத பரிசோதனைகளுக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.