வடக்கு ரயில் மார்க்கத்தில் கிளிநொச்சியிலிருந்து பளை வரையிலான ரயில் மார்க்கம் நாளை மறுதினம் திறந்து வைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்தேவி ரயில், கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய பயணத்தை காலை 9.20 அளவில் ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்கா தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பிலிருந்து யாழ்.பளை வரையில் குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் ஒன்றும் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பளை நோக்கிய சொகுசு ரயில் சேவை, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து எதிர்வரும் 07 ஆம் திகதி பகல் 2.45 அளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்கா தெரிவித்தார்.
இந்த ரயிலுக்கான பயணச் சீட்டை வட ரயில் மார்க்கத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் முற்பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறினார்.
கோட்டையிலிருந்து பளை வரையிலுமான பயணக் கட்டணம் ஆயிரத்து 400 ரூபா அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.