Site icon ilakkiyainfo

15வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் கைது! – திருநெல்வேலியில் சம்பவம்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே நேற்றிரவு கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி தினமான கடந்த வியாழக்கிழமை திருநெல்வேலியின் பாற்பண்ணை என்ற பிரதேசத்திலுள்ள தனது வீட்டில் இருந்தவேளை, யாரும் இல்லாத சமயம் குறித்த சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இச்சம்பத்துடன் தொடர்புடைய நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினரைக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 74, 26 வயதுடைய இருவர் கைது!
03-03-2013
சிறு வயதுடைய இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவரை கைது செய்துள்ளதாக மாதம்பை மற்றும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இதில் ஒரு சம்பவம் மாதம்பை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மாதம்பை பிரதேசத்தில் வசிக்கும் ஏழு வயதுடைய சிறுமி ஒருவரை இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் 74 வயதுடைய நபர் ஒருவர் மாதம்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேக நபர் குறித்த சிறுமியின்  வீட்டுக்கருகில் வசிக்கும் அயல் வீட்டுக்காரர் என தெரிவிக்கப்படுகின்றது. இச்சிறுமியின் தாய் தொழில் பெற்று வெளிநாடு சென்றுள்ள நிலையிலேயே சிறுமி இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் இது தொடர்பில் வெளியில் எவருக்கும் சொல்லக்கூடாது எனவும் அவ்வாறு கூறினால் கொலை செய்து விடுவதாக தன்னை அச்சுறுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை மாணவியான 13 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 26 வயது இளைஞன் ஒருவன் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இளைஞன் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் வினவியுள்ளனர். இதன்போது தனக்கும் குறித்த இளைஞருக்குமிடையில் காதல் தொடர்பு இருப்பதாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளதோடு அவ்விளைஞனும் தானும் கணவன்- மனைவியாக இருந்துள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முந்தல் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை சிலாபம் மற்றும் புத்தளம் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version