கென்யாவின் மாசை மாரா தேசியப் பூங்காவில் , ஒரு ஆற்றை, நீரில் அடித்துச் செல்லக்கூடிய அபாய நிலையிலும், வாயில் குட்டியைக் கவ்வியபடி கடக்கும் துணிச்சலான தாய்ச் சிங்கம் (புகைப்படமெடுத்தவர் கிரேக்க வனவிலங்குப் புகைப்பட நிபுணர் கைரியக்கோஸ் கஸிராஸ்)
அதிகம் குட்டிகள் பெற்ற சிங்கக் குழுக்கள்தாம் ஆறுகள் இணையும் இடத்துக்கு அருகே உள்ள நிலப்பரப்புகளைப் பிடித்துக்கொண்டு வாழ்கின்றன என்று அண்டை நாடான தான்சானியாவில் 45 ஆண்டு காலம் நடத்தப்பட்ட ஆய்வொன்று கூறுகிறது.
இந்தப் பகுதிகள் ஆண்டு முழுவதும் தண்ணீர் வசதிகள் கொண்டவையாக இருக்கின்றன. நிழல் கிடைக்கிறது. பதுங்கி இருந்து வேட்டையாட தகுதியான இடம் இந்தப் பகுதிகளில் இருக்கும். இந்த மாதிரி பெறுமதியுள்ள இடங்களில் வசிக்கவேண்டுமானால், சிங்கங்களுக்கு, சிங்கக் குழுக்கள் தரும் பலமான பாதுகாப்பு தேவை.