கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் 2 கொள்கலன்களுக்குள் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 36 கோடி ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
சூட்சுமமான முறையில் போல்ட் ஆணிகளுக்குள் மறைத்து இந்த ஹெரோயின் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரஜை ஒருவரின் பெயருக்டகு ஹெரோயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்ட பெட்டிகள் கராச்சி நகரிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.