குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்று நிறைவடைந்த தேசத்தின் மகுடம் கண்காட்சியில் சிங்கள பாடசாலைச் சிறுமிகள் சின்ன மேளம் ஆடினார்கள்.
குறிப்பாக எடி என்னடி இராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என்கிற பாடலுக்கு இவர்கள் போட்ட ஆட்டம் இரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இப்பாடல் தமிழில் மட்டும் அன்றி சிங்களத்திலும் பிரசித்தி பெற்றதாகும்.
ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் நந்தன விஜேசிங்க பாடசாலை மாணவர்களின் திறமைகளுக்கான களத்தை சிசுதிரிய தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்திக் கொடுத்து இருந்தார்.