அமெரிக்காவில் பேருந்து ஒன்றில் ஏழு வயது பெண் குழந்தையுடன் சென்ற பெண் ஒருவர் ஹெராயின் போதைப்பொருளை உபயோகித்து கடுமையான போதையில் தத்தளித்து கொண்டிருந்தார்.
அவர் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்தபோது, அவருடைய மகள், தாயை எழுந்திருக்க சொல்லி கெஞ்சியும், அவர் போதையில் தடுமாறியபடி இருந்துள்ளார். இந்த காட்சியை வீடியோ எடுத்த பேருந்தில் பயணம் செய்த ஒருவர் உடனடியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார்.
இந்த வீடியோ பதிவான சில நிமிடங்களில் போலீஸார் அந்த பஸ்ஸை கண்டுபிடித்து நிறுத்தி, உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருடைய ஏழு வயது மகளுக்கு தக்க பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இந்த வீடியோ பதிவான ஒரு சில மணி நேரங்களில் 400,000 பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். பலர் பலவிதமாக அந்த பெண்ணை பற்றி படுமோசமான கமெண்ட்களை அள்ளி வீசியுள்ளனர்.
இந்த வீடியோ அமெரிக்காவில் உள்ள ஜான் வாரன் என்பவர்தான் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அந்த பெண்ணை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆணுறையில் ஓட்டையிட்டு பாலுறவில் ஈடுபட்டவர் குற்றவாளியாக தீர்ப்பு
கனடா நாட்டவர் ஒருவர் தனது காதலியுடன் உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறையில் ஓட்டையிட்டு அவரை கர்ப்பமுறச் செய்ய முயற்சித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்படி அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடபட்ட குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டிருக்கும் நிரேக் ஜெரட் ஹட்கின்சனின் காதலி, தம்முடன் உறவுகொள்ள அனுமதி அளித்திருந்த போதும் கர்ப்பமுறுவதை தடுக்க ஆணுறை பயன்படுத்துமாறு நிபந்தனை விதித்திருக்கிறார்.
எனினும் இருவருக்கும் இடையிலான உடலுறவில் ஆணுறை பற்றி கருத்தில் கொள்ளவில்லை என்றும் இது தனது காதலியின் துரோகச் செயல் என்றும் ஹட்கின்சன் வாதிட்டுள்ளார்.
குற்றவாளியாக அறிவிக்கப்பட் டிருக்கும் ஹட்கின்சன் 18 மாத சிறை தண்டனைக்கு முகம்கொடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதோடு பாலியல் பலாத்கார குற்றவாளிகள் பட்டியலில் இணைக்கப் படவுள்ளார்.
“ஒருவர் ஒரு பெண்ணை தொடும் முன்னர் எந்த காரணத்துக்காகவேணும் குறித்த பெண் விதிக்கும் நிபந்தனைக்கு உடன்பட வேண்டும். அவ்வாறு ஏற்படும் உடன் படிக்கையை குறித்த நபர் மீற முடியாது” என்று கடந்த வெள்ளிக்கிழமை கனடா உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்த 2006 ஆம் ஆண்டிலேயே 43 வயதான ஹட்கின்சன் தனது காதலியுடன் ஆணுறையில் ஓட்டையிட்டு உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கர்ப்பமுற்றதையடுத்து தான் செய்த மோசடியை ஹட்கின்சன் காதலியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நீதிமன்றத்தால் பெயர் வெளியிடாத குறித்த காதலி, கருக்கலைப்பு செய்து, தனது காதலன் பற்றி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.