கனடாவில் பிறக்கும்போதே இறந்த குழந்தை ஒன்று 28 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கனடாவின் Halifax என்ற நகரத்தில் உள்ள IWK Health Centre என்ற மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு 34 வயது Robin Cyr என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
பிறக்கும்போது குழந்தை இறந்து பிறந்ததாக பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் நர்ஸ் ஆகியோர் கூறியதால் Robin Cyr , கடும் அதிர்ச்சி அடைந்தார்.
Robin Cyr என்ற தாயால் , தன் குழந்தை இறந்ததை நம்பவே முடியவில்லை. தன்னுடைய உறவினர்களை கூப்பிட்டு தன் குழந்தை இறந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே என் குழந்தை கண்விழிக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்று கதறி அழுதார்.
அவருடைய ஆறுதலுக்காக அவருடைய உறவினர்கள் ஒன்று சேர்ந்து குழந்தையை நடுவில் வைத்து மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
என்ன அதிசயம். உயிர் இழந்ததாக மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்ட குழந்தை உயிர் பிழைத்தது. குழந்தை திடீரென கண் விழித்து அழுதது. அதை பார்த்த குழந்தையின் தாய் மகிழ்ச்சியால் துள்ளி குதித்தார்.
இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் நர்ஸுகள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் இருந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது.
தொடர்புடைய செய்தி
http://www.nydailynews.com/news/world/miracle-baby-breaths-declared-dead-article-1.1718030