Site icon ilakkiyainfo

மைவெளிச்சம் பார்க்கச் சென்ற பெண்ணை நிர்வாணப்படுத்த முயன்ற பூசாரி கைது

மைவெளிச்சம் மூலம் சாஸ்திரம் பார்ப்பதற்காக கோயிலுக்குச் சென்ற 27 வயதுடைய பெண் ஒருவரை நிர்வாணப்படுத்த முயற்சித்த 49 வயதுடைய பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புத்தளம், ஆனமடுவ பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

ஆனமடுவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு ஏற்பட்ட குணமாக்க முடியாத வியாதி ஒன்று தொடர்பாக அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் உள்ள பூசாரியிடம் மைவெளிச்சம் மூலம் சாஸ்திரம் கேட்கச் சென்றுள்ளார்.

இதன்போது பூசாரி நோயை கண்டுபிடிக்க வேண்டும் என கூறி பெண்ணை நிர்வாணப்படுத்த முயற்சித்துள்ளார். இதனையடுத்து குறித்த பெண் பூசாரியிடமிருந்து தப்பிச் சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரான பூசாரியை கைது செய்துள்ளனர்.

Exit mobile version