இவ்வாண்டு நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கட் அணியை வாழ்த்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது கைவிரல் அடையாளத்தை பதித்ததுடன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கை அணி வீரர்களை வாழ்த்தும் பொருட்டு ஒருகோடி கையொப்பத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் தென்பகுதியிலிருந்து குழுவொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தது.
மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணத்தில் மேற்படி குழு மக்களிடம் கைவிரல் அடையாளங்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அங்கு வருகைதந்திருந்த அமைச்சர் தமது கைவிரல் அடையாளத்தையும் பதிவு செய்தார்.