ஜெனிவா ஐ.நா.சபை முன்றலில் வரலாறு காணாத வீரம் காட்டிய புலிக்கொடி போர்த்திய வீர வேங்கை!!
30 வருடமாக வன்னியிலிருந்த புலிகள் இலங்கை இராணுவத்துடன் சண்டையிட்டு சாதனை படைத்ததெல்லாம் ஒரு சாதனையா?
‘நேருக்கு நேரே நின்று…. தன்னம் தனியாக… ஒத்தைக்கு… ஒத்தையாக நின்று வன்னி புலிகள் எப்பொழுதாவது சிங்கள இராணுவத்தினருடனோ அல்லது பொலிஸ்காரர்களோடு சண்டைக்கு போயிருக்கிறார்களா?
அவாகளால் செய்யமுடியாத வரலாறு காணாத வீர சாகசத்தை ஜெனிவாவில் ஐ.நா.சபை முன்றலில் புலம்பெயர் வீரவேங்கை ஒருவன் செய்து காட்டியுள்ளான்.
‘நேருக்கு நேரே நின்று.. ஆயுதம்…ஏதுமின்றி ஒற்றை விரலை காட்டி.. அதுவும் சுவிஸ் அதிரடி பொலிஸாரையே ‘டேய்… டேய் ’…. ‘டேய்… டேய் ’ வாடா..வாடா’ என சண்டைக்கு கூப்பிடுவது எப்படிப்பட்ட வீரம்??
இதுதான் புலம்பெயர் புலிகளின் வீரம். (இந்த வீடியோவில் காணப்படுபவா் …‘இந்தியனாம்’ என புலிப்பினாமி இணையதளம் ஒன்று கதை எழுதியுள்ளது. இவங்கள் சொல்லும் கதைகளை அப்படியே கிரகிக்க கூடிய கூட்டங்களும் இன்னும் இருக்கதான் செய்கின்றது.)
கடந்த திங்கள் அன்று (10-03-2014) ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக இனப்படுகொலைக்கு நீதி கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில்தான் இந்த கூத்துகள் இடம்பெற்றது.
பேரணி நடைபெற்ற இடத்தில் சிலர் நல்லா தண்ணியடிச்சுவிட்டு போய் நின்று…… தங்களுடைய குரங்குத்தனமான விளையாட்டுகள் காட்டியதால் அங்கு கூடிய அனைவரையும் சுவிஸ் பொலிஸார் கண்ணீர் புகை அடித்து கலைத்துள்ளார்கள்.
இவர்களை (புலிகள்) பற்றி நிறையவே அறிந்துதான் ஏற்கனவே எல்லா நாட்டுக்காரர்களும் இன்னமும் இவர்களை தடைபண்ணி வைத்திருக்கிறார்கள். அதுகூட இந்த கூட்டங்களுக்கு தெரியுமோ தெரியவில்லை.
இனிமேல் காலங்களில் ஜெனிவா ஐ.நா.சபை முன்றலில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்துவதற்கு இவர்களுக்கு இடமளிப்பார்களோ என்பதும் கேளவிக்குறி.
புலம்பெயர் புலி அமைப்புகளால் நடாத்தப்படுகின்ற ஊர்வலங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றும் தமிழர்களில் ஒரு பகுதியினர் உணர்வுபூர்வமான பங்கு பற்றினாலும், இன்னொரு பகுதியினர் தண்ணியடிப்பதற்கும், சும்மா ஜாலியாக பொழுதை கழிப்பதற்கும் இக்கூட்டங்களுக்கு வருகின்றவர்கள் .
இவர்களால் ஜெனிவாவில் உள்ள கடைகளில் மதுபானம் அமோக வியாபாரமாம். ஊர்வலங்கள், கூட்டங்களுக்கு இவர்களை வரவழைக்கும் அல்லது கொண்டுவந்து சேர்ப்பவர்களுக்கான உணவு, மதுபான, பயண செலவுகளை அந்தந்த (பல்வேறு) புலம்பெயர் புலி அமைப்பினர்களே பொறுப்பேற்கின்றார்கள்.
சிலநேரம் பல்வேறு அமைப்பினர்களால் ஓழுங்கு செய்து வந்தவர்களிடையே நடக்கும் போட்டி மனப்பான்மையால்… இந்த கூட்டத்தை குழப்பவேண்டும் என்பதற்காக அவர்களே குழப்பங்களை ஏற்படுத்தி கொள்வதும் நடக்கின்றது. அப்படி நடக்கும்போது அந்த பழியை அரசாங்கம், சிங்களவன், இந்தியன் என யாரிலாவது பழியை போட்டுவிடவேண்டியதுதான்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையக்குழுவினால் சமர்பிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணை பிரேரணையில் புலிகளும் ‘போர்க்குற்றவாளிகள்’ என உள்ளடக்கப்பட்டுள்ளார்கள் என்பது புலம்பெயர் புலிகளுக்கு தெரியாது போல் உள்ளது.
போர்க்குற்றவாளிகளான புலிகளே இலங்கை அரசாங்கத்தை ‘போர்க்குற்றவாளிகள்’ எனக்குற்றம் சாட்டி விசாரணை செய்யவேண்டும் என ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து, ஐ.நா . சபையிடம் கோரிக்கை வைத்தால்…. ஐக்கிய நாடுகள் சபைக்காரர்கள் எப்படி இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வார்கள்?
ஐ.நா. சபை முன்றலில் காவலுக்கு நின்ற சுவிஸ் அதிரடி பொலிசாரிடம், வாய்ச்சண்டைக்கு போய் வாங்கிக் கட்டியதுடன்.. ஐ.நா. சபை வளாகத்துக்குள் அத்துமீறி (ஏதோ, திறந்த வீட்டுக்குள் நாய் நுழைவது போல்) நுழைய முயற்சித்ததையும் அடுத்தே அங்கிருந்தவர்கள் மீது, சுவிஸ் பொலிசாரினால் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டது.
உலகத் தலைவர்கள், & பிரதிநிதிகளே.., ஐ.நா. சபை வளாகத்துக்குள் உரிய அனுமதியுடன், பாதுகாப்பு சோதனையின் பின்னரே உள்நுழைய முடியும் என்பதை புரியாத கூட்டமா இது??
“வி வான்ட் தமிழீழம், அவ லீடர் பிரபாகரன்” (எமக்கு வேண்டும் தழீழம், எங்கள் தலைவர் பிரபாகரன்) என்பதை தவிர வேறு கோரிக்கைகளே இவர்களுக்கு தெரியாதது மாதிரி, இக்கோசங்கள் போடுவதினாலும், குடித்து விட்டு கும்மாளம் போடுவதினாலும் இவர்கள் எதைக் காணப் போகின்றார்கள் என்பது புரியாத புதிர் தான்.
இதேவேளை இவ் ஊர்வலத்தில் சென்ற சிலர் புகைப்படங்களுக்கு தமது முகத்தைக் காட்டத் தயங்கியதும், இவ் ஊர்வலத்தில் சென்ற பலர் (தமிழீழம் கேட்டுக் கத்திய பலர்) எதிவரும் ஜூலை மாத விடுமுறைக்காக ஸ்ரீலங்கா செல்ல, இப்பொழுதே டிக்கெட் புக் பண்ணி உள்ளதும் நகைப்புக்கு இடமாக உள்ளது..!
எது எப்படிஇருப்பினும் உண்மையாகவே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் எனும் நோக்கில் உணர்வுபூர்வமாக ஐ.நா. சபை முன்றலுக்கு சென்ற பல தமிழகளின் எழுச்சியையும் மழுங்கடித்ததுடன், உலகம் பூராவும் உள்ள தமிழர்களின் மானத்தை வாங்கியதும் மட்டுமே இவர்கள் கண்ட வெற்றி!!
-இலக்கியன் -சுவிஸ்–