யாழ்.வடமராட்சி இன்பருட்டிப் பகுதியில் 16 அடி நீளமான இராட்சத மீன் ஒன்று இன்று (15) அதிகாலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த மீன் திமிங்கல வகையினைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். மேற்படி மீனினை அப்பகுதியினைச் சேர்ந்த பெருமளவு பொதுமக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.
அத்துடன், குறித்த மீனினை பாகங்களாக வெட்டி புதைப்பதற்கான நடவடிக்கையில் இன்பருட்டி மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.