ilakkiyainfo

பஸ் கடைத்தொகுதிக்குள் புகுந்து விபத்து : 5 பேர் காயம்!!

 

திருகோணமலை மட்கோ சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் இ.போ.ச. பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளானதில் 5பேர் படுகாயமுற்று திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

DSC_0996கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு சென்றுவிட்டு பஸ்சாலைக்கு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை நகரில் இருந்து வருகையில் மட்கோ சந்தியில் வலப்பக்கமாகவுள்ள கடைத் தொகுதியுடனேயே குறித்த பஸ் மோதியுள்ளது.

இதன்போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல ஆட்டோக்களும் சேதமாகின. மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version