காணாமல் போன மலேசிய விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படும் உடைந்த விமானத்தின் பாகங்களை போன்ற பொருட்கள் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் மிதப்பது, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார்.
மலேசியன் ஏர்லைன்ஸிற்கு செந்தமான MH 370 விமானம் கடந்த 8ஆம் திகதி 239 பயணிகளுடன் மாயமானது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல்வேறு நாடுகள் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் குறித்த விமானத்தினுடையது என சந்தேகப்படும் உடைந்த பாகங்களை போன்ற பொருட்கள் மிதப்பதை, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி ஆர்பட் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்த பொருட்கள் குறித்து ஆய்வு நடத்த, அவுஸ்திரேலியா ஒரு விமானத்தை அனுப்பி உள்ளது.
இது குறித்து டோனி ஆர்பட் கருத்து தெரிவிக்கையில்,
மலேசிய விமானம் மாயமாகி இரண்டு வாரங்கள் கழித்து விமானத்தின் பாகங்களை போன்ற பொருட்கள் இருப்பதற்கான தகவல் செயற்கைகோள்கள் மூலம் கிடைத்துள்ளன.
அதற்கும் மாயமான விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம். அவுஸ்திரேலிய விமானப்படையான ஆரியன் அந்த பொருட்களை அவதானிக்க 3 கண்காணிப்பு விமானங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது என்ன பொருட்கள், அவை எங்கு காணப்பட்டன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
மாயமான மலேசிய விமானத்தை இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் தேடும் பொறுப்பை அவுஸ்திரேலியா ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கும் மாயமான விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம். அவுஸ்திரேலிய விமானப்படையான ஆரியன் அந்த பொருட்களை அவதானிக்க 3 கண்காணிப்பு விமானங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது என்ன பொருட்கள், அவை எங்கு காணப்பட்டன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
மாயமான மலேசிய விமானத்தை இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் தேடும் பொறுப்பை அவுஸ்திரேலியா ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.