ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான மூன்­றா­வது தீர்­மானம், விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­படும் கட்­டத்தை நெருங்­கி­யுள்­ளது. எதிர்­வரும்  26ஆம் திகதி இந்த தீர்­மானம் ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­திக்­கப்­படும்.

இந்த தீர்­மா­னத்தின் மீதான வாக்­கெ­டுப்பு, வரும் 27 அல்­லது 28ஆம் திகதி நடை­பெறும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்தப் பத்தி எழுதப்படும்­போது, பரி­சீ­ல­னையில்  இருக்கும் தீர்­மான வரை­வுக்குப் போதிய ஆத­ரவு கிடைத்­துள்­ள­தாகத் தெரி­கி­றது.

சில­வே­ளை­களில், ஆத­ரிக்கும் நாடு­களின் எண்­ணிக்கை குறைந்­தாலும் கூட, தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டு­வது உறுதி என்றே ஜெனீவா தகவல்கள் கூறு­கின்­றன.

இந்­த­நி­லையில், அடுத்­த­டுத்து மூன்று ஆண்­டு­க­ளாக இலங்­கைக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­படும் இந்த தீர்­மா­னங்கள், மேற்­கு­ல­கமும், தமிழர் தரப்பும் எதிர்­பார்க்கும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­துமா-? என்ற சந்­தே­கமும் இருக்­கவே செய்­கி­றது.

ஏனென்றால், இந்த ஆண்டு நிறை­வேற்­றப்­படும் தீர்­மானம், ஐ.நா மனி­த­உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­துக்கு, இலங்­கையில் நடந்த மீறல்கள் குறித்து விசா­ரிக்கும் ஆணையை வழங்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இது கிட்­டத்­தட்ட ஒரு சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­முறை தான்.

இந்த தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என்­பது ஏற்­க­னவே உறு­தி­யாகி விட்­டது.

இதற்கு முன்னர் நிறை­வேற்­றப்­பட்ட இரண்டு  தீர்­மா­னங்­களும், அவ்­வ­ளவு  கடு­மை­யா­ன­தாக இல்­லா­வி­டினும், உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றையை வலி­யு­றுத்­து­வ­தாக இருந்த போதிலும், அவற்றை அர­சாங்கம் ஏற்றுக் கொள்­ள­வில்லை.

அவற்றைப் போலவே, இப்­போ­தைய தீர்­மான வரைவும், நாட்டின் இறை­யாண்­மையை மீறு­வ­தாக உள்­ள­தென்று அர­சாங்கம் சுட்­டிக்­காட்டி வருகி­றது.

எனவே, இந்­த­வாரம், ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்தை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளாத நிலையில், இது எவ்­வாறு நடை­முறைப்­ப­டுத்­தப்­படும் என்று சந்­தேகம் எழு­வது இயல்பு.

இந்த தீர்­மான வரைவின், பெரும்­பா­லான பகு­திகள், இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்­டிய கடப்­பா­டு­க­ளையே சுட்­டிக்­காட்­டு­கி­றது.

ஒரு பகு­தியில் தான், அதா­வது போரின் போது இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் விவ­கா­ரத்தில் தான், ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யா­ள­ருக்கு  விசா­ரணை மற்றும்   கண்­கா­ணிப்பை மேற்­கொள்ளும் ஆணையை இது வழங்­கு­கி­றது.

எனவே, இந்த தீர்­மானம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றால், அதற்கு இலங்கை அர­சாங்­கத்தின் முழு­மை­யான பங்களிப்பும் ஒத்­து­ழைப்பும் அவ­சி­ய­மா­னவை.

13ஆவது திருத்­தச்­சட்டம், மாகா­ண­ச­பை­க­ளுக்கு அதி­கா­ரங்­களை பகிர்தல், விசா­ர­ணை­களை மேற்­கொள்ளல், நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை செயற்­ப­டுத்தல் என்று விரியும் – தீர்­மான வரைவு கூறும் இலங்கை அர­சுக்­கான கடப்­பா­டு­களை, வெளியில் உள்ள எவ­ரா­லுமே நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது.

அதே­வேளை, ஐ.நா. மனி­த ­உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­படும், போர்க்­கால மீறல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளையும் கூட, இலங்கை அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­பின்றி முழு­மை­யாக முன்­னெ­டுக்­கவும் முடி­யாது.

ஏனென்றால், ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம், மேற்­கொள்ளும் விசா­ர­ணைகள் இலங்­கைக்குள் இருந்தும் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

மீறல்கள் நடந்த இடங்­களை அவ­தா­னிக்­கவும், சாட்­சி­களை அழைத்து வாக்­கு­மூ­லங்­களைப் பெறவும், பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் தரப்பு நியாயங்களைப் பெறவும், அந்த விசா­ர­ணைக்­கு­ழுவோ, விசா­ரணை அதி­கா­ரியோ, எப்­ப­டியும், இலங்­கைக்கு வந்­தே­யாக வேண்டும்.

அதற்கு இலங்கை அர­சாங்கம், ஒத்­து­ழைப்பும் அனு­ம­தியும் அளிக்க வேண்டும்.

ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­னத்தை நிரா­க­ரித்­துள்ள அர­சாங்கம், எப்­படி அந்த தீர்­மா­னத்தின் மூலம் உரு­வாக்­கப்­படும் ஒரு விசாரணைக்­கு­ழுவை இலங்­கைக்குள் அனு­ம­திக்கும்?

அதுவும், ஐ.நா. மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையை ஒரு புலி போலவே வர்­ணிக்கும் அர­சாங்கம், அவரால் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவை மட்டும் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள எப்­படி அனு­ம­திக்கும்?

இது எப்­போ­துமே ஐ.நா மனி­த­ உ­ரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்­துக்கு இருக்கும் சிக்கல் தான். பாது­காப்புச் சபையைப் போன்று, ஐ.நா மனி­த­ உ­ரி­மைகள் பேரவை நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஒரு அமைப்பு அல்ல.

அதனால், மனி­த­ உ­ரிமை மீறல்கள் தொடர்­பாக விசா­ரணை செய்­வ­தற்கு, விசா­ரணைக் குழுவை நிய­மிக்க, பேர­வையால் பிறப்­பிக்­கப்­படும் ஆணையைச் செயற்­ப­டுத்­து­வது  எப்­போ­துமே, சவா­லா­கவே இருந்­துள்­ளது.

அதனால் தான், பல்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளிலும் சம்­பந்­தப்­பட்ட நாட்டின் இணக்­கப்­பாட்­டுடன் தீர்­மா­னத்தை நிறை­வேற்ற முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­துண்டு.

ஆனால், எப்­போ­துமே, எந்­த­வொரு நாடும், தமது நாட்டில் நடக்கும் மீறல்கள் குறித்து வெளியில் இருந்து விசா­ர­ணைகள் மேற்­கொள்ளப்படுவதை விரும்­பு­வ­தில்லை.அதனால் சம்­பந்­தப்­பட்ட நாட்டின் ஒப்­புதல் கிடைப்­ப­தென்­பது மிகவும் அபூர்­வ­மா­னது. என்­றாலும் ஒரு சில உதா­ர­ணங்கள் இருக்கத் தான் செய்­கின்­றன.

இதுவே பாது­காப்­புச்­ச­பையின் தீர்­மா­ன­மாக இருந்தால், எப்­ப­டியோ ஒரு கட்­டத்தில், சம்­பந்­தப்­பட்ட நாடு வளைந்து கொடுத்துப் போக முடி­வெடுத்து விடும்.

ஐ.நா. மனி­த­உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணைக் குழு, விசா­ரணை நடத்­து­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட நாடு, உள்ளே வர இடமளிக்காது போனால், வெளியில் இருந்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

கடந்த ஆண்டு வட­கொ­ரியா தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்ட இத்­த­கைய விசா­ரணைக் குழுவும், உள்ளே அனு­ம­திக்­கப்­ப­டாமல், வெளியில் இருந்தே விசா­ரித்து அறிக்­கை யை சமர்ப்­பித்­தது.

அது­போ­லவே, இலங்கை இந்த தீர்­மா­னத்தை நிரா­க­ரித்­துள்ள நிலையில், ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யாளர் நிய­மிக்கும் விசாரணைக்குழுவை உள்ளே வர அரசாங்கம் இட­ம­ளிக்­காது போனால், வெளி யில் இருந்தே விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் நிலை ஏற்படும்.

சிறப்பு அறிக்­கை­யாளர் ஒருவர் மூலமோ, ஐ.நா. நிபு­ணர்­கு­ழுவின் மூலமோ, அல்­லது சுதந்­தி­ர­மான ஆணைக்­குழு ஒன்றின் மூலமோ, ஐ.நா. மனி­த­உ­ரிமை ஆணை­யா ளர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கலாம்.

ஆனால், இத்­த­கைய விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் அதி­காரம், ஐ.நா. மனி­த­உ­ரிமை ஆணை­யா­ள­ருக்கு இல்லை என்று அர­சாங்கம் கூறிவரு­கி­றது.

எனினும், தீர்­மான வரைவு, ஐ.நா மனி­த ­உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­துக்கே, ஆணை பிறப்­பிக்கும் வகையில் அமைந்­துள்­ளது.

கடந்­த­வாரம், கொழும்பில் நடந்த கருத்­த­ரங்கு ஒன்றில், நவ­நீ­தம்­பிள்­ளைக்கு விசா­ரணை நடத்தும் அதி­காரம் இல்லை என்றும், அதற்கு ஐ.நா. சட்­டங்­களில்  இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை என்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறி­யி­ருந்தார்.

ஆனால், ஜெனீ­வாவில், கடந்த வாரம், மனி­த­உ­ரிமை அமைப்­பு­க­ளுடன் நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டலின் போது, ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேரவையில் நிறை­வேற்­றப்­படும்  தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில், விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் அதி­காரம்  தனக்கு இருப்­ப­தாக, ஐ.நா. மனி­த­உ­ரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை குறிப்­பிட்­டி­ருந்தார்.

இன்­னொரு விட­யத்­தையும், இங்கு குறிப்­பிட வேண்டும், ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு ஆத­ர­வ­ளித்து வரும், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள், விசா­ரணை அதி­காரம், ஐ.நா. மனி­த­உ­ரிமை ஆணை­யா­ள­ருக்கு கிடை­யாது என்றே குறிப்­பிட்­டி­ருந்­தன.

ஆனால், கியூ­பாவோ, ஐ.நா. மனி­த­ உ­ரிமை ஆணை­யா­ள­ருக்கே அதற்­கு­ரிய அதி­காரம் உள்­ள­தென்றும், அவ­ரது பணி­ய­கத்­துக்கு கிடை­யாது என்றும் வாதிட்­டி­ருந்­தது.

எனினும், ஐ.நா. மனி­த­உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால் ஏற்­க­னவே விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன என்பது இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

வடக்கு, கிழக்கு இணைப்பை இரத்துச் செய்யும் தீர்ப்பை பெற்றுக் கொடுத்த, சுனாமி நிவா­ரண பொதுக்­கட்­ட­மைப்­புக்கு எதி­ரான தடை உத்தரவைப் பெற்ற- சிங்­களக் கடும்­போக்­கு­வாத   சட்­டத்­த­ரணி கோமின் தயா­சிறி, நவ­நீ­தம்­பிள்­ளைக்கு விசா­ரணை அதி­காரம் இல்லை என்றும்,  இந்த தீர்­மா­னத்தின் ஊடாக அவ­ருக்கு அத்­த­கைய அதி­கா­ரத்தை பெற்றுக் கொடுக்க அமெ­ரிக்கா முனை­வ­தா­கவும், குறிப்­பிட்­டுள்ளார்.

நவ­நீ­தம்­பிள்­ளையின் அதி­கா­ரங்கள் என்ன என்று கேள்வி எழுப்பும் ஒரு தீர்­மா­னத்தை முன்­வைத்து, இந்த விசா­ரணை முயற்­சியைத் தோற்கடிக்­கலாம் என்றும் அவர் யோசனை தெரி­வித்­துள்ளார்.

இதற்குப் போதிய கால­அ­வ­கா­சமும், ஆத­ரவும் கிடைக்­குமா என்­பது சந்­தே­கமே.

ஏனென்றால், ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில் இந்த அமர்வு இறு­திக்­கட்­டத்தை எட்டி விட்­டது. வேண்­டு­மானால், 26ஆவது அமர்வில் வரும் ஜுன் மாதம், இது­பற்­றிய தீர்­மா­னத்தை முன்­வைக்க தனது நட்பு நாடு­களின் மூலம் இலங்கை முயற்­சி­களை மேற்கொள்­ளலாம்.

ஐ.நா. மனி­த­உ­ரிமை ஆணையாளரின் விசாரணைகளைத் தடுக்க இலங்கையும் தன்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதையே இது காட்டுகிறது.

எவ்வாறாயினும், ஜெனீவா தீர்மானம் இலங்கையை மேலும் நெருக்கடியில் தள்ளிவிடப் போவது மட்டும் உறுதி.

ஏனென்றால், இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டால், உள்நாட்டில் சிங்களத் தேசிய வாதம், அரசாங்கத்தை விழுங்கி விடும். இதற்கு இணங்காது போனால், சர்வதேச அளவிலான நெருக்கடிகளை இலங்கை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

விசாரணைக் குழுவை இலங்கை அனுமதிக்க மறுத்தால், அமெரிக்கா, உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தனிப்பட்ட ரீதியாக இலங்கை மீது பொருளாதார, பயணத் தடைகளை கொண்டு வரக்கூடும்.

அதற்கான சாத்தியங்களை இப்போதே அனுமானிப்பது கடினம்.

எவ்வாறாயினும், தனது தீர்மானத்தை ஜெனீவாவில் நிறைவேற்றும் கடப்பாட்டை மட்டும் மேற்குலகம் கொண்டிருக் கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனை நடைமுறைப்படுத்தும் கடப்பாடும் அவர்களுக்கு உள்ளது என் பதை மறந்துவிட முடியாது.

– சுபத்ரா

Share.
Leave A Reply