ilakkiyainfo

13 வயது சிறுமிக்கு, குழந்தை பிறந்ததால் பெரும் பரபரப்பு

103545152babyமதுரை அரசு மருத்துவமனையில், அருப்புக்கோட்டையை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகள் வனஜா (13) (பெயர் மாற்றம்). இதே ஊரைச் சேர்ந்த ஐடி மாணவர் ரவிசங்கர் என்பவர், மாணவியை ஏமாற்றி அவருடன் தொடர்பு வைத்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

அவரது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்த பெற்றோர், மகளிடம் கேட்ட போது ரவிசங்கரின் தொடர்பு குறித்து கூறினார். இதனையடுத்து வனஜாவின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புகார் செய்தனர்.

வழக்குப்பதிவு செய்த பொலிசார், ரவிசங்கரை கைது செய்தனர். பின்னர், ரவிசங்கர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த வனஜாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி எடுத்தது. அவரை பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு இன்று அதிகாலையில் ஆண் குழந்தை பிறந்தது. 13 வயது சிறுமிக்கு, குழந்தை பிறந்த தகவலால் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர் முத்தமிட்டதை திட்டவட்டமாக மறுக்கும் நக்மா
25-03-2014

தேர்தல் பிரச்சாரத்தின்போது நடிகை நக்மாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் முத்தம் அளித்ததாக எழுந்த சர்ச்சையை திட்டவட்டமாக மறுத்துள்ளார் நக்மா.

இந்திய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாபூரில் பிரசார அலுவலக திறப்பு விழாவில் அவர் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் ஹாபூர் காங்கிரஸ் உறுப்பினர் கஜராஜ் தனது கையால் நக்மாவின் முகத்தை தன்பக்கம் இழுத்தது சர்ச்சையை தோற்றுவித்தது. நக்மாவை இழுத்து கஜராஜ் அவரது கன்னத்தில் பலவந்தமாக முத்தமிட்டார் எனவும் கூறப்பட்டது.

இதுகுறித்து தி இந்து இணையத்தளத்திற்கு கருத்து வெளியிட்ட நக்மா,

‘‘அந்த சம்பவம் நடந்தபோது அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்ததால் அதிகமான இரைச்சலாக இருந்தது. அருகில் இருந்தவர்களின் குரல்களையும் கேட்க முடியாத நிலையால், என்னை தன் அருகில் அழைத்து ஒரு தகவலை எம்.எல்.ஏ. கூற வேண்டி வந்தது. அங்கு எனது பிரசாரத்தை தொடங்கும் முன்பு அங்கிருந்த ஒரு தலைவரின் சிலைக்கு மாலை அணிவிக் கும்படி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.’

நான் ஒரு நடிகை என்பதால், சில பத்திரிகையாளர்கள் முத்தம் அளித்ததாக உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது இடத்தில் வேறு யாராக இருந்தாலும், அப்படித்தான் நெருக்கமாக பேசியிருக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் எனது தலையில் முக்காடு போட்டிருந்தேன். இதன் பிறகும் இப்படி ஒரு புகார் கூறுவது ஏற்புடையது அல்ல. அவர் என்னை தான் பெற்ற மகள் போல் பாவித்து பழகுபவர் என நக்மா கூறினார்.

Exit mobile version