யாழ்.குடாநாட்டில் புங்குடுதீவுப் பகுதியில் கடந்த இரு மாதங்களுள் ஐந்து பேர் தீயில் கருகி மரணம் அடைந்துள்ளனர். ஒரு ஆலயக் குருவும் மூன்று குடும்பப் பெண்களுமென அடுத்தடுத்து இவ்வாறு மரணமடைந்தமையானது அப்பகுதி மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புங்குடுதீவுக் கிராமத்தில் யுத்தத்திற்கு முன்னர் 20 ஆயிர த்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவந்த னர். ஆனால் தற்போது மூவாயிரம் பேர் மட்டுமே வாழ்கின்றனர்.
பல அடிப்படை வசதிகள் இன்மை நிரந்தர வருமானம் இன்மை போன்ற காரணங்க ளால் அங்குள்ளவர்களிடையே குடும்பத்தக ராறுகள் ஏற்பட்டு அவை மரணம் வரை செல்வதுடன் தீயில் எரிந்து மரணமாகும் நிலை அதிகரித்து வருகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தை சேர்ந்த சர்வானந்தன் விஜயராணி தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் இரண்டு நாள் கழித்து 5 ஆம் திகதி 8 ஆம்வட்டாரத்தைச்சேர்ந்த பத்மநாதன் கமலேஸ்வரி என்ப வரும் கடந்த 10 ஆம் திகதி நாகேந்திரக் குரு க்களும் அடுத்த நாள் 11 ஆம்திகதி 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஜெகதீஸ்வரி என்பவரும் தீயில் கருகி இறந்துள்ளனர்.
இவர்கள் நான்கு பேரும் தீயில் எரிந்தநிலையில் யாழ்.போதனா வைத்திய சாலை க்கு எடுத்து வரப்பட்ட போதும் உயிரிழந்து ள்ளதோடு இதே காலப்பகுதியில் மேலும் ஒருவர் இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இவ்வாறு ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர் கள் தொடர்ச்சியாக தீயில் எரிந்து இறந் தமை அக்கிராம மக்களை அச்சமடை வைத்துள்ளது. மிகவும் பின்தங்கி நிலையிலுள்ள இக்கி ராமத்தினரின் உளநிலைப்பாடுகள் பிரச் சினைகள் தொடர்பாக சமூகத் தொண்டு நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.