அவுஸ்ரேலியாக்கு எதிரான இருபது-20 உலக கிண்ணத் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஐந்தாவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகிறது. இதன் ‘பிரிவு-2’ லீக் போட்டியில், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள அணிகள் மோதுதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெய்லி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
அவுஸ்திரேலிய அணிக்கு பின்ச் (16), வோர்னர் (20) நிலைக்கவில்லை. வொட்சன் (2) ஏமாற்றினார். மேக்ஸ்வெல் (45) அதிரடி காட்டினார்.
ஹொட்ஜ் 35 ஓட்டங்களை எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற, அவுஸ்திரேலிய அணி 20 ஓவுரில், 8 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. ஹெடின் (15), முரிஹெத் (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு டுவைன் ஸ்மித் (17) ஏமாற்றினார். அரை சதம் கடந்த கெய்ல் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சிம்மன்ஸ் (22) ஓரளவு கைகொடுத்தார்.
இறுதிவரை ஓவரில் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இதில் அணித் தலைவர் சமி இரண்டு சிக்சர் விளாச, மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. பிராவோ (27), சமி (34) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் இந்தியா பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.