ilakkiyainfo

கோபம் மாரடைப்புக்கு வழி வகுக்கும்

உண்மையான பலசாலி யாதெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே உண்மையான பலசாலியாவான்.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம். “ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.

கோபம் என்பது உடல் ரீதியாக, மனரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சி பூர்வமான, சுற்றுச் சூழல் சார்ந்த பல விடயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறை கார ணமாக உண்டாகிறது.

நாம் சொல் வதை, மற்றவர்கள் மதிக்காத போதும், நம்முடைய பிரச்சினைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போதும் நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன் னிலையில் விமர்சிக்கப்படும் போதும் எதிர்பார்த்த மரியாதை கிடைக்காதபோதும் கோபம் ஏற்படுகிறது.

ஒருவன் மற்றொருவனைப் பார்த்து  “கழுதை” என்று திட்டும்போதும்  அவன்  ‘குரங்கு’ என்று பதிசக்குத் திட்டினால் அந்தச் செயல் தான் கோபம் ஆகும்.

உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒருவித அதிருப்தி யான வெளிபாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு சிந்திக்கும்போது ஏற்படும் எதிர்விளைவு கோபமாகும்.

மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி  வாழ்வதாகும். ஒருவருக்கொருவர்  அனுசரித்துப் பாராட்டி, உதவி   செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமை யாததாகும். ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாக இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை கவனம் போன்றவை சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்யவேண்டிய செயல்கள் இதனால் பாதிக் கப்படுகின்றன.

நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலைகளையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள் வாழ்வின் சந்தோஷத்தை பறித்துவிடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்) திருமணம் உட்பட பலதொடர்புகளை அழித்துவிடும்.

தொழிலை முடக்கிவிடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப் பட்டது. மன இறுக்கத்தை ஏற்படுத்த இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

முறையாக சிந்தித்து செற்படுவதை தவி ர்த்து நமது செயல்களை தவறானதாக்கிவிடுகின்றது. கோபம் மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண் டாக்கி உயிரை பறித்துவிடும் என்று வல்லுனவர்கள் கூறுகிறார்கள்.

26-1377509190-jwala-gutta6-60055 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உட்பட இருதய நோய்களினால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்கு உயர் கிறது.

கோபமானது இதய இரத்த நாளங் களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும்.

இது மாரடைப்பில் விட்டு விடும். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் இரத்த அழுத் தம், நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோப த்தினால் ஏற்படுகின்றன.

கோபம் முளையைத் தாக்கும், பக்கவாதத்துக்கு கூட காரண மாக அமைவதுண்டு என சில மருத்து ஆய்வுகள் கூறு கின்றன. கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்துவிட வேண்டியது முக்கியம்.

கோபத்தை கட்டுப்படுத்துதல் கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கின்றான். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப் பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, இரத்த அழுத்தம் திடீ ரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்று கின்றன

கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பைக் கைவிடுங்கள், மற்றவர்க ளையும் அன்போடு பாருங்கள் நிதான மாக கோபமூட்டிய நபரின் சூழ் நிலையை சிந்தியுங்கள்.

கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிருங்கள். உடனே உங்கள் மனதை வேறு விடயத்தில் திருப்புங்கள்.

அவசரம் ஒருபோதும் வேண்டாம், பொறுமையாக இருங்கள்.

நேரம், மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

செய்யும் வேலையை நேசத்துடன், நேர்மையுடன் செய்யுங்கள்.

Exit mobile version