Site icon ilakkiyainfo

சிரியாவில் கொடூரம்: பொதுமக்கள் முன்னிலையில் கண்களை தோண்டியெடுத்து மரண தண்டனை நிறைவேற்றம் (வீடியோ)

 

சிரியாவில் வயதான முஸ்லீம் பெரியவர் ஒருவரை கொலை செய்து அவருடைய பணத்தை திருடிய வாலிபர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக சுட்டு கொலை செய்யும்படி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதன்படி சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் கூடிநின்ற பொது இடத்தில் அந்த குற்றவாளியின் கண்களை தோண்டி எடுத்துவிட்டு, கொடூரமாக கொலை செய்து அவனுடைய பிணத்தை பொதுமக்கள் முன்னிலையில் ஒரு நாள் முழுவதும் கட்டி வைத்திருந்தனர்.

இந்த கொடூர சம்பவம் சிரியாவின் Raqqa என்ற நகரில் நடந்துள்ளது. சிரியாவில் உள்ள Sharia court என்ற நீதிமன்றத்தில் நேற்று நடந்த இந்த வழக்கில், ஒரு அப்பாவில் முஸ்லீம் முதியவரை பணத்திற்காக ஈவு இரக்கமின்றி கொலை செய்த வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பலரும் அறியும் வண்ணம், பொதுமக்கள் முன்னிலையில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

முதலில் அந்த வாலிபரை துடிக்க துடிக்க அவருடைய கண்களை தோண்டி எடுத்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சித்ரவதை செய்து இறுதியில் தலையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டது. இந்த தண்டனையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுற்றி நின்று பார்த்து கைதட்டி வரவேற்றனர்,.
| Edit

Exit mobile version