பிரேசில் நாட்டில் ஓடும் பேருந்து ஒன்றில் பெண் கண்டக்டரை அடித்து உதைத்து திருட முயற்சித்த இரண்டு கொள்ளையர்கள் பிடிபட்ட சம்பவம் ஒன்று அந்த பேருந்தின் கேமரா ஒன்றினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் Jaboatão dos Guararapes in Pernambuco என்ற இடத்தில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த பேருந்தில் ஏறிய இரண்டு இளைஞர்கள் திடீரென பெண் கண்டக்டரை சரமாரியாக தாக்கி அவர் வைத்திருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
திருடர்களுடன் கடுமையாக போராடிய பெண் கண்டக்டர் ஒரு கட்டத்தில் பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே குதித்து சாலையில் சென்றவர்களிடம் உதவி கேட்டார். ஒரு திருடன் பேருந்து கதவு வழியாக தப்பி ஓடினான். மற்றொரு திருடன் பேருந்திலேயே வசமாக மாட்டிக்கொண்டான். பின்னர் தப்பியோடிய திருடனையும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் பேருந்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவினால் பதிவு செய்யப்பட்டிருந்தது. பிடிபட்ட திருடர்கள் இருவர் பிரேசில் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.