கார் சாரதியொருவர் பெண்ணொருவரிடம் வழிக்கேட்டுவிட்டு அப்பெண்ணையே விழிபிதுங்கவைத்த சம்பவமொன்று கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அவசர அவசரமாக காரியாயலயத்திற்கு சென்றுகொண்டிருந்த பெண்ணுக்கு அருகில் காரொன்று வந்து நின்றுள்ளது.
அந்த காரின் சாரதி குறித்த பெண்ணிடம் சிங்கள மொழியில் வழிகேட்டுள்ளார். கார் சாரதி உயர்பதவி வகிப்பவர் போல தோற்றமளித்ததால்.
அந்த பெண்ணும் வழியை கூறிவிட்டு காருக்கு முன்பாக விரைந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு அருகில் மீண்டும் காரை நிறுத்திய சாரதி அதேவழியை மீண்டும் கேட்டுள்ளார்.
தான் கூறியது அவருக்கு விளங்கவில்லையோ என்று எண்ணிய அப்பெண் சாரதிபக்க ஜன்னல் வழியாக பாதைபற்றி விபரித்துகொண்டிருந்தார்.
அப்போது அந்தசாரதி தன்னுடைய அந்தரங்க உறுப்பை காண்பித்துள்ளார். சற்றும் எதிர்பாராத அந்தப்பெண் திகைத்நிற்கையில் காரின் சாரதியோ காரை தான்கேட்ட பாதையில் காரை செலுத்தாமல் வேறுபாதையில் காரை செலுத்தி சென்றுவிட்டார்.
மனிதாபிமான நோக்கில் சில உதவிகளை செய்யும் போது முகம்சுழிக்கவைக்கும் சம்பவங்களும் இடம்பெறாமல்
இல்லை. சாரதிக்கு வழி கூறிய அப்பெண்ணோ தனக்கு நேர்ந்ததை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நொந்துகொண்டார்.
பிரான்ஸ் பெண்கள் இருவரை நாடுகடத்த உத்தரவு
புத்த பெருமானின் உருவத்தினை உடலில் பச்சை குத்திக் கொண்டு நாட்டுக்குள் பிரவேசித்த பிரான்ஸ் நாட்டு பெண்கள் இருவரை நாடுகடத்துமாறு நீர்கொழும்பு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அந்த பெண்கள் இருவரையும் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(03) ஆஜர் படுத்திய போது நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார்.
மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்கள் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது விமான நிலைய பொலிஸாரால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் இந்த பெண்கள் வருகை தந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவில் எறிகணைகள் மீட்பு
04-04-2014
முல்லைத்தீவு, கற்சிலைமடு பிரதேசத்திலுள்ள கிணறொன்றிலிருந்து 17 எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் அவ்விடத்தில் ஆயுதங்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் தேடுதல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கற்சிலைமடுவிலுள்ள வீட்டு கிணற்றிலிருந்தே இந்த எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டினை வாடகைக்கு எடுத்த நிறுவனமொன்று வீட்டின் கிணற்றினை துப்புரவு செய்யும் வேளையிலேயே மேற்படி எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.