ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1373-வது சட்டப்பிரிவு, ‘வெளிநாட்டு பயங்கரவாதம்’ என்ற பிரிவின்கீழ் 3,000 பெயர்கள் அடங்கிய பட்டியல் தயாரகிவிட்டதாம்.
தேசியம், தாயம், பிரபாகரன், மாவீரர் தியாகம், இராணுவ அடுக்குமுறை…, தமிழ் மக்கள் துன்பப்படுகிறார்கள்…, நாங்கள் அதை பெற்று தருவோம், இதைபெற்று தருவோம்… என சொல்லி வடக்கு மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு.. தமிழர்களுக்கு எதையுமே பெற்றுக்கொடுக்காமல்…, சும்மா வீரவசனங்களை மட்டுமே பேசி, அறிக்கைகள் விட்டுக்கொண்டு…
புலம்பெயர் புலியாதரவு அமைப்புகளிடம் பணம்பெற்றுகொண்டு, அவர்களின் ஆதரவுடன் கிழமைக்கு ஒருதடவை வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் செய்து…. புலம்பெயர் தேசத்தில் நின்றுகொண்டு ‘புலிவீரம்பேசி’ ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் (முக்கியமாக சிறிதரன் ) பிழைப்பில் ‘இத்தடைச் சட்டம்’ பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாம்.
இலங்கை அரசு வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழர் அமைப்புகளையும், 424 தனி நபர்களையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1373-வது சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளது. இந்த 424 தனி நபர்களும் இலங்கைக்குள் நுழைய தடை என்ற அர்த்தத்தில் அநேக மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இவர்கள் இலங்கைக்குள் நுழைய தடை என்பது நிஜம்தான். ஆனால், அது மட்டுமல்ல விஷயம். அதற்கு மேலும் சில சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படலாம்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1373-வது சட்டப்பிரிவு, ‘வெளிநாட்டு பயங்கரவாதம்’ என்ற பிரிவின்கீழ் வருகிறது. செப்டெம்பர் 11-ம் தேதிய தாக்குதலின்பின் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டப் பிரேரணை, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாகியது.
அதன்பின் அவ்வப்போது சில திருத்தங்கள் செய்யப்பட்டன.
இந்தப் பிரிவின் பிரதான நோக்கமே, ஒரு நாடு, மற்றொரு நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பு, அல்லது நபரை பற்றிய தகவல் அறிய, அந்த நபர் வசிக்கும் நாடு உதவ வேண்டும்.
குறிப்பிட்ட நபரால் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிந்தால், அந்த நபரை கண்காணிக்கும்படியோ, கைது செய்யும்படியோ கோரலாம். தகுந்த காரணங்கள் அல்லது தடயங்கள் காட்டப்பட்டால், இன்டர்போல் மூலம் கைது செய்வதற்கான வாரன்ட் பெறப்படலாம்.
இந்த பட்டியலில் உள்ள சிலர்மீது ஏற்கனவே இன்டர்போல் வாரன்ட் பெறப்பட்டுள்ளது.
மற்றொரு விஷயம், இந்த அமைப்புகளையும் நபர்களையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1373-வது சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யும் நாடு (இந்த கேஸில் இலங்கை) அந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு இலங்கையில் உள்ள சொத்துக்களை (நிலம், வீடு உட்பட) பறிமுதல் செய்யலாம். அதற்கு இந்த ஐ.நா. பதிவு போதுமானது.
நாம் விசாரித்தவரை, தற்போது வெளியான பட்டியலை தவிர மற்றொரு விரிவான பட்டியலையும் இலங்கை அரசு தயாரித்து வருவதாக தெரிகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ளவர்கள், இலங்கையால் தடை செய்யப்பட்ட 16 அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள். புதிய பட்டியலில், இந்த அமைப்புகளுடன் தொடர்பற்ற நபர்கள் உள்ளதாக தெரிகிறது. சுமார் 3,000 பெயர்கள் அடங்கிய அந்தப் பட்டியல், பகுதி பகுதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பதிவு செய்யப்படும் என்கிறார்கள். இந்த 3,000 பேரும் வெளிநாடுகளில் தற்போது வசிப்பவர்கள்.
தற்போது தடை செய்யப்பட்ட அமைப்புகள், மற்றும் தனி நபர்களில் பெயர்கள், இலங்கை மற்றும் வெளிநாட்டு முகவரிகள் (இந்திய முகவரிகளும் உள்ளன), தொலைபேசி எண்கள் ஆகியவற்றை இலங்கை அரசு சிறப்பு அரசாணை ஒன்றில் வெளியிட்டுள்ளது.
பட்டியலை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.