பெங்களூர்: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள், தங்க, வைர நகைகளின் மதிப்பு உள்பட பல தகவல்களை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் எடுத்துரைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகா மல் இருக்க விலக்கு அளிக்ககோரி அவரது வக்கீல்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் தனது வாதத்தை தொடங்கினார்.
சென்னைமகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையில் 2,400 சதுர அடி நிலம் வாங்கிய வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இளவரசி பெயரில் கடந்த 1995 மே 17ம் தேதி கிரயம் செய்யப்பட்டுள்ளதாக அகமது என்பவர் அளித்துள்ள சாட்சியத்தை சிங் படித்து காட்டினார்.
தர்மபுரியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில் 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராகவும், பர்கூர் தொகுதி பேரவை உறுப்பினராகவும் இருந்த ஜெயலலிதா, தொகுதி பணியை கவனிப்பதற்காக எனது தாயார் பெயரில் இருந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார்.
ஆரம்பத்தில் மாதம் ரூ.34 ஆயிரம் வாடகை கொடுக்கப்பட்டது. எனது தாயார் இறந்த பின் வாடகை தொகை ரூ.13 ஆயிரமாக குறைத்து வழங்கினார். கடந்த 1996ம் ஆண்டுக்கு பின் வீட்டை காலி செய்தனர். எண் 36 போயஸ் கார்டன் முகவரியில் இருந்து சசிகலா கையெழுத்திட்டு காசோலை அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளதை படித்து காட்டினார்.
தமிழக அரசின் பொதுப்பணி துறையில் செயற்பொறியாளராக இருந்த வி.பாஸ்கரன் அளித்துள்ள சாட்சிய த்தில் திருவாரூர் மாவட்டம், வண்டாள்பாளையத்தில் இயங்கி வந்த ராம்ராஜ் ரைஸ் மில்லை வாங்கி ராம்ராஜ் ஆக்ரோ மில்லாக மாற்றம் செய்ததாக தெரிவித்துள்ளதை வக்கீல் சிங் தெரிவித்தார்.
தங்க, வைர ஆபரணங்கள் மதிப்பீடு: புகழ் பெற்ற தங்க ஆபரண நிறுவனமான கீர்த்திலால் ஜுவல்லர்ஸ் நிர்வாகி சுப்புராவ் அளித்துள்ள சாட்சியத்தில் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் சிலர் எங்களிடம் அணுகி தங்களிடம் உள்ள தங்க ஆபரணங்களை மதிப்பீடு செய்து கொடுக்கும்படி கேட்டனர்.
மொத்தம் 228 அயிட்டங்களை மதிப்பீடு செய்தோம். அதில் 75 வைரம், 24 தங்க ஆபரணங்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. எங்களிடம் கொடுத்த ஆபரணங்களை கடந்த 198687ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாகவும், அப்போது ஆபரணங்களின் தொகை எவ் வளவு என்பதை மதிப்பீடு செய்யும்படி கேட்டு கொண்டனர்.
அதன்படி எங்களிடம் கொடுத்த ஆபரணங்களில் மதிப்பை 198687ல் ரூ.78 லட்சத்து 10 ஆயிரத்து 400 என்றும் 198990ம் ஆண்டில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 18 ஆயிரத்து 90 என்று மதிப்பீடு செய்து கொடுத்ததாக சாட்சியம் அளித்துள்ளதை ஆதாரத்துடன் தெரிவித்தார்.
கோத்தாரி ஓரியண்ஸ் பைனான்ஸ் நிறுவன நிர்வாகி மோகன்ராஜ் கொடுத்துள்ள சாட்சியத்தில், தங்கள் நிறுவனத்தில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, மூன்று தவணையாக னீ2 லட்சத்து 81 ஆயிரத்து 307 டெபாசிட் செய்துள்ளதாக தெரிவித்தார்.
பிரபல திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் இளங்கோவன் அளித்துள்ள சாட்சியத்தில் எனது தந்தையும், வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவும் இணைந்து மணிமகுடம் என்ற திரைப்படத்தில் நடித்தனர்.
அதன் மூலம் எங்கள் குடும்பத்துடன் ஜெயலலிதாவுக்கு உறவு ஏற்பட்டது. எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான எஸ். எஸ்.ஆர். திருமண மண்டபம் மற்றும் எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் திருமணமண்டபத்தை நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் நடத்த வாடகைக்கு கொடுத்ததாக தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் சொத்து மற்றும் வருவாய்: வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஆடிட்டராக இருந்த கோபால்ரத்தினம் அளித்துள்ள சாட்சியத்தில், கடந்த 1964 முதல் 1986ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் ஆடிட்டராக நான் பணியாற்றி வந்தேன்.
ஜெயலலிதா மற்றும் அவரது தாயார் பெயரில் இருந்த சொத்துகள், அதன் மூலம் கிடைத்த வருவாய் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்து அறிக்கை கொடுப்பதுடன், அதற்கேற்ற வருமான வரியும் தவறாமல் செலுத்தி வந்தோம். கலாநிகேதன் நாடக மன்றம், ஜாக்பேட், நிலத்தில் விளையும் பயிர்கள் மூலம் கிடைத்த வருவாய் ஆகியவையும் சொத்து கணக்கில் காட்டப்பட்டுள்ளது என்ற முழு விவரத்தை படித்து காட்டினார். ஆந்திரா மாநிலத்தில் ஐதராபாத் நகரில் திராட்சை தோட்டம் வாங்கியது உள்பட பல தகவல்களையும் அவர் சாட்சியத்தில் தெரிவித்துள்ளதை படித்து காட்டினார்.
ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி கடன்: சென்னை அபிராமபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றிய பவானி கொடுத்துள்ள சாட்சியத்தில். வழக்கில் முதல்வர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை பங்குதாரராக கொண்டு இயங்கி வரும் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு எங்கள் வங்கியில் இருந்து ரூ.1.50 கோடி கடன் 1992ம் ஆண்டு வழங்கப்பட்டது.
அந்த கடனை வட்டியுடன் 1994ம் ஆண்டு திருப்பி செலுத்தியதாக தெரிவித்தார். மேலும் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி அதிகாரிகள் கொடுத்துள்ள சாட்சியத்தில் ஜெயலலிதா உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கம்பெனிகள், பங்குதாரர்களாக உள்ள கம்பெனிகள் பெயரில் குறைந்த பட்சம் ரூ.500 முதல் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்து கணக்கு தொடங்கியது, அந்த கணக்குகள் மூலம் கடன் பெற்றது, டெபாசிட் செய்தது போன்ற விவரங்களை தெரிவித்தனர்.
அதிலும் குறிப்பாக அனைத்து வங்கி கணக்குகளும் எண். 36 போயஸ் கார்டன் மற்றும் எண் 31ஏ போயஸ் கார்டன், சென்னை என்ற முகவரியில் மட்டுமே தொடங்கியுள்ளதாக சாட்சியம் அளித்துள்ளதை தெளிவாக வக்கீல் பவானி சிங் எடுத்துரைத்தார்.
ஆந்திராவில் கட்டிடம்: மும்பையை சேர்ந்த ராமசாமி என்பவர் அளித்துள்ள சாட்சியத்தில் ஆந்திர மாநிலம் செகந்திராபாத் நகரில் 256.66 சதுர அடிகள் கொண்ட கட்டிடம் 1992 மார்ச் 25ம் தேதி கிரையம் செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஐதராபாத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவருக்கு சொந்தமான 1.84 ஏக்கர் திராட்சை தோட்டத்தில் பல வகையான திராட்சை பழம் பயிர் செய்து விற்பனை செய்வதாகவும், முக்கால் ஏக்கர் நிலத்தில் காய்கனிகள் பயிர் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், திராட்சை தோட்டத்தில் இருந்த வீடு பல கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதை பவானிசிங் படித்து காட்டினார்.
ஸ்ரீகுமரன் சில்க்ஸ்: வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரன் திருமணத்திற்காக சென்னையில் உள்ள ஸ்ரீகுமரன் சில்க்ஸ் ஷோ ரூமில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 725 மதிப்பிலான பட்டு சேலைகள் உள்பட ஆடைகள் வாங்கியதாகவும், அதற்கான தொகையை ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் எடுத்து கொள்ளும் வகையில் அவரது கையெழுத்திட்ட காசோலை கொடுத்தாகவும் ஸ்ரீகுமரன் சில்க்ஸ் நிர்வாகி கேசவன் கொடுத்துள்ள சாட்சியத்தை படித்து காட்டி னார்.
ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.1.70 லட்சம் கொடுத்து நிலம் வாங்கியதாக விஸ்வநாதன் கொடுத்துள்ள சாட்சியத்தை எடுத்துரைத்தார்.
தமிழக சுற்றுலா துறை அலுவலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கொடுத்துள்ள சாட்சியத்தில் தமிழக சுற்றுலா துறையில் செய்தி தொடர்பாளராக நடராஜன் இருந்தபோது, சுற்றுலாத்துறை சேமநல நிதி பிரிவின் தலைவராக அவரது மனைவி சசிகலாவை நியமனம் செய்தார் என்ற விவரத்தை எடுத்து காட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமன் கொடுத்துள்ள சாட்சியத்தில் 9.89 ஏக்கர் நிலம் சசிகலா பெயரில் கிரையம் செய்துள்ளதா கவும், அதில் சசிகலாவின் கணவர் நடராஜன் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளதை எடுத்து கூறினார்.
இளவரசி பணம் டெபாசிட்: முகமது ஆயூப் கொடுத்துள்ள சாட்சியத்தில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டியில் சசிகலா பெயரில் 3 பேரிடம் 13.57 ஏக்கர் நிலம் வாங்கி கிரயம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். தமிழக மின்துறையில் பொறியாளராக பணியாற்றி வரும் மருதையன் கொடுத்துள்ள சாட்சியத்தில் ரிவர்வே ஆக்ரோ கம்பெனிக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உள்பட வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் பல ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர்: தமிழக அரசின் பத்திர பதிவுதுறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜகோபால் கொடுத்துள்ள சாட்சியத்தில் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, நீலாங்கரை, பையனூர், திருவல்லிகேணி, கிண்டி உள்பட பல பகுதிகள் நெல்லை, தஞ்சாவூர், கொடைக்கானல், கொடாநாடு,
ஆந்திரா மாநிலம் உள்பட பல இடங்களில் நிலம் மற்றும் கட்டிடங்கள் வாங்கி குவித்துள்ளதையும், குறிப்பாக தமிழகத்தில் வாங்கிய சொத்துகளை நேரடியாக பதிவு துறை அலுவலகம் வந்து பதிவு செய்யாமல், சம்மந்தப்பட்ட பகுதி சார் பதிவாளரை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா வீட்டிற்கு வரவழைத்து அங்கேயே பத்திர பதிவு செய்துள்ளதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் யார் யார் பெயரில் எவ்வளவு நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரத்தையும் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
ரிவர்வே ஆக்ரோ நிறுவனம் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட பத்திர பதிவுகள் மூலம் 948.80 ஏக்கர் நிலத்தை பல கோடி மதிப்பில் வாங்கி வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரன் பெயரில் கிரயம் செய்யப்பட்டுள்ளது. ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக ரூ.16 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் கட்டிடம் வாங்கப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த பையனூரில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை பெயரில் இருந்த நிலங்கள் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. அன்றைய மார்க்கெட் விலையை விட அடிமாட்டு விலைக்கு நிலம் வாங்கி வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா பெயரில் பதிவு செய்துள்ளதை ஆதாரத்துடன் விளக்கினார்.
மேலும் ராமையாவுக்கு சொந்தமான நிலம் ரூ.1 லட்சம், காந்தபாயிக்கு சொந்தமான நிலம் ரூ.3 லட்சத்து 04,500, வசந்தபாயிக்கு சொந்தமான நிலம் ரூ.3 லட்சத்து 46,500, அசோக்குமார் என்பருக்கு சொந்தமான நிலம் ரூ.2.84 லட்சம் என்று மொத்தம் ரூ.17 லட்சத்து 26 ஆயிரம் கொடுத்து வாங்கி சசிகலா பெயரில் பதிவு செய்துள்ளதை எடுத்து கூறினார்.
சிறுதாவூரில் அமானுல்லாவுக்கு சொந்தமான 41.85 ஏக்கர் நிலம் ரூ.1.90 லட்சத்திற்கும், கோபிநாத் என்பவருக்கு சொந்தமான 10.86 ஏக்கர் நிலம் ரூ.1.80 லட்சத்திற்கும், அமானுல்லாவுக்கு சொந்தமான 7.44 ஏக்கர் நிலம் ரூ.1,10 லட்சத்திற்கும், முனியன் என்பருக்கு சொந்தமான 03.4 ஏக்கர் நிலம் ரூ.1.07 லட்சத்திற்கும், பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தலா 3,197 சதுர அடி கொண்ட 3 கட்டிடம் னீ15 லட்சம் கொடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளதை புள்ளி விவரத்துடன் தெரிவித்தார்.
மெடோ ஆக்ரோ பாரம் நிறுவனத்திற்காக பலரிடம் 16 லட்சத்து 94 ஆயிரத்து 250 விலையில் 113.21 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமராஜ் ஆக்ரோ நிறுவனத்திற்காக காந்தி என்பவருக்கு சொந்தமான 18.58 ஏக்கர் நிலம் ரூ.3 லட்சத்து 96 ஆயிரம் கொடுத்து வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் லட்சுமி என்பவருக்கு சொந்தமான 3.84 ஏக்கர் நிலம் ரூ.76,800க்கும், அசோகன் என்பவருக்கு சொந்தமான 8.01 ஏக்கர் நிலம் னீ1 லட்சத்து 62,200க்கு வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக வாடே ரமேஷ் என்பவருக்கு சொந்தமான 6 ஆயிரத்து 943 சதுர அடிகள் கொண்ட கட்டிடம் ரூ.90 லட்சத்திற்கு வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது. லெக்ஸ் பிராபர்ட்டிஸ் நிறுவனத்திற்கு ரூ.26 லட்சம் மதிப்பில் கட்டிடம் வாங்கி பதிவு செய்துள்ளதாக புள்ளி விவரத்துடன் தெரிவித்தார். அதை தொடர்ந்து விசாரணை இன்றும் நடக்கிறது. அரசு சிறப்பு வக்கீலுக்கு தி.மு.க சார்பில் ஆஜரான வக்கீல்கள் பி.குமரேசன், சரவணன், நடேசன், பாலாஜிசிங் ஆகியோர் உதவி செய்தனர்.
சசிகலா, இளவரசி இன்று ஆஜர் : விலக்கு அளிக்க நீதிபதி மறுப்பு
சொத்து குவிப்பு வழக்கு விசாரணை முடிந்தபின் சசிகலா வக்கீல் மணிசங்கர் மற்றும் இளவரசி வக்கீல் அசோகன் ஆகியோர் எழுந்து, அசையும் சொத்து முடக்கம் செய்த வழக்கு தொடர்பாக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாவது மற்றும் நான்காவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் உடல் நிலை பாதித்துள்ளதால், சனிக்கிழமை ஆஜராக வேண்டும் என்பதில் இருந்து விலக்களித்து செவ்வாய்கிழமை ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, நான் உத்தரவிட்ட நாளில் வரட்டும். அப்படி வரவில்லை என்றால், விலக்கு அளிப்பது குறித்து முடிவு செய்கிறேன் என்றார். தொடர்ந்து குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் விலக்களிக்ககோரியும், சனிக்கிழமை விசாரணையின் போது முடிவு செய்யலாம் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.