ரோமானிய நாட்டில் Bucharest என்ற நகரத்தில் நான்கு இளைஞர்கள் குடிபோதையில் 80 வயதுக்கும் மேல் உள்ள ஒரு வயதான மூதாட்டியின் உடையை பிடித்துக்கொண்டு சுற்றியபடி விளையாடிய அதிர்ச்சி வீடியோ ஒன்று நேற்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாங்களாகவே வழக்கு பதிவு செய்த ரோமானிய போலீஸார் அந்த நான்கு இளைஞர்களையும் தேடிவருகின்றனர்.
வயதான மூதாட்டி ஒருவரை கதற கதற அவரை பிடித்து சுற்றிய அந்த இளைஞர்கள் கூச்சலிட்டபடியே இருந்தனர். பதறியடித்த அந்த மூதாட்டி அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.
ஆனாலும் விடாமல் துரத்திய ஒரு இளைஞர் மீண்டும் அவரை பிடித்து சுற்றினார். இதனால் அந்த மூதாட்டி நிலைகுலைந்தார்.
இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பார்த்த லட்சக்கணக்கானோர், அந்த இளைஞர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறிதுகூட மனிதத்தன்மையே இல்லாத மிருகங்கள் என்று பலர் கமெண்ட் அளித்துள்ளனர்.
தேடிப்பார் வாசகர்களுக்காக இந்த வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம். நீங்களும் உங்கள் பங்கிற்கு கண்டனத்தை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.