இங்கிலாந்தில் நடைபெற்ற தலையணை தினத்தை மக்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
இங்கிலாந்தின் டிராபல்கர் என்ற பகுதியில் நடைபெற்ற ஆறாவது சர்வதேச தலையணை சண்டை தினத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கலந்து கொண்டோர் தங்கள் குழந்தை பருவம் பாரம்பரிய விளையாட்டான,இந்த சண்டை விளையாட்டை ரசித்து விளையாடினர்.
நகர்ப்புற விளையாட்டு திடல் இயக்கம் ஏற்பாடு செய்த இந்த ஆண்டு விழா, மக்களின் மன அழுத்தத்தை போக்கும் என்று அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
மேலும் இங்கிலாந்த் மட்டுமின்றி பாரிஸ், நியூயோர்க், சூரிச், ரோம் மற்றும் மாட்ரிட் போன்ற 100க்கும் மேற்ப்பட்ட நகரங்களிலும் இந்த தலையணை சண்டை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தலையணை சண்டை யானது புதிய்ஸ் கின்ன்ஸ் சாதனையையும் படைத்துள்ளது.