மட்டக்களப்பு கல்முனையில் இன்று காலை ஏற்பட்ட கோர வீதி விபத்தில் 3 பேர் பலியாகிஉள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். இன்று ஞாயிறு அதிகாலை 5.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இரவு நேர தனியார் பஸ் ஒன்றும் மற்றும் ஒரு பயணிகள் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான போதே இந்த உயிர் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம், கல்முனை அஷ்ரப் தேசிய மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து வந்த பஸ்சில் பயணம் செய்தவர்களே இறந்தவர்களாவர். இன்னும் 16 பேர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
சம்பவ நேரம் இரண்டு பஸ்களின் சாரதிகளும் மது அருந்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மற்று இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.