ilakkiyainfo

வங்கியில் பணம் எடுக்கச் சென்ற இளம் பெண் மாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துச்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

396767562ladyசெட்டிபாளையம் பிரதான வீதியை சேர்ந்த சிவலிங்கம் வைஸ்ணவி (21வயது) என்ற இளம்பெண் மட்டக்களப்பில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.

குறித்த பெண் குறித்த வங்கிக்குசென்று பணத்தினை எடுத்துக்கொண்டு சென்றுள்ள நிலையிலும் இதுவரையில் குறித்த பெண் வீடு வந்து சேரவில்லையென பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் காணாமல்போனமை தொடர்பில் களுவாஞ்சிகுடி மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் குறித்த இளம் பெண் வீடுவந்து சேரவில்லையெனவும் பெண்ணின் பணத்துக்கா யாரும் கடத்திச்சென்றார்களா அல்லர் வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

காணாமல்போன பெண் வேறு சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் அற்றவர் எனவும் குறித்த பெண்ணின் வீட்டில் வீட்டு நடவடிக்கைகளை கவனத்துவருபவர் எனவும் பிரதேச தகவல்கள் தெரிவித்தன.

குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கணவன் சாப்பாட்டுக் கோப்பையால் தாக்கியதில் மனைவி பலி!

திருகோணமலை – கோமரங்கடவெல அடம்பென பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்துள்ளார்.

51 வயதான யூ. தயாவதி என்ற பெண்ணே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவு வேளையில் இவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து கணவரால் சாப்பாட்டுக் கோப்பையால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பதில் நீதவான் தி. திருச்செந்தில்நாதன் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

தாக்குதல் நடத்திய கணவரான உபசேன நந்தசிறி நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அட்டாளைச்சேனை மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி
15-04-2014
அட்டாளைச்சேனையில் நேற்று (14) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வளைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரு இளைஞர்கள் சாய்ந்தமருதில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் ஒன்றில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சாய்ந்தமருது 13ஆம் பிரிவைச் சேர்ந்த 26 வயதுடைய முஹம்மட் சாஜஹான் என்பவர் உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முஹம்மட் அமீரின் புதல்வரான இவர் கடந்த வாரம் கட்டாரில் இருந்து விடுமுறையில் நாடு திரும்பியிருந்தார்.

இந்த விபத்து தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

Exit mobile version