ilakkiyainfo

ஐந்து நாட்களுக்கு நயன்தாரா கேட்ட இரண்டு கோடி ரூபாய். தயாரிப்பாளர் அதிர்ச்சி.

Oh My God, என்ற இந்தி படம், பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற பரபரப்பான காமெடி படம். இந்த படத்தை வெறும் ரூ.20கோடியில்தான் தயாரித்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்த படம் ரூ.105 கோடியை வசூல் செய்தது.

இது இந்த படத்தின் தயாரிப்பாளரே எதிர்பாராதது. இந்த படத்தில் அக்ஷயகுமார், பரேஷ் ராவல், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில்  பிரபுதேவா மற்றும்  சோனாக்ஷி சின்ஹா ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ரீமேக் தற்போது தெலுங்கு மொழியில் தயாராக உள்ளது. வெங்கடேஷ் மற்றும் பவன்கல்யாண் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் ஒரு சிறுவேடத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளார் இதன் இயக்குனர்.

ஐந்து நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்றும் அவர் கேட்டுள்ளார். ஆனால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

ஐந்து நாட்கள் நடிக்கும் வேடமாக இருந்தாலும், ஐம்பது நாட்கள் நடிக்கும் வேடமாக இருந்தாலும், ஒரே சம்பளம்தான்.

இந்த சம்பளத்திற்கு குறைவாக நடிக்க முடியாது என நயன்தாரா மறுத்துவிட்டதால், தயாரிப்பாளரும், இயக்குனரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது இந்த வேடத்தில் நடிக்க இலியானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குனர். இந்தியில் நடனம் ஆடிய பிரபுதேவா-சோனாக்ஷி சின்ஹா இந்த படத்திலும் நடனம் ஆடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத்துக்கு துரோகம் செய்ய முடியாது. கெளதம் மேனனிடம் மறுப்பு தெரிவித்த த்ரிஷா.
19-04-2014

THIRISHAஇயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, கெளதம் மேனன் நடிகை த்ரிஷாவிடம் அணுகினார்.

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் த்ரிஷாவின் நெருக்கமான நட்பை பெற்ற கெளதம் மேனன், தன்னுடைய படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டர் இருப்பதாகவும், அதில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் அவர் சொன்ன கேரக்டரை கேட்டு தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார் த்ரிஷா.

அஜீத் படமாக இருந்தும், த்ரிஷா நடிக்க மறுத்தது ஏன்? என விசாரித்தபோது தான் தெரிந்தது அது ஒரு நெகட்டிவ் கேரக்டர் என்பது. அஜீத்துக்கு எதிராக துரோகம் செய்யும் கேரக்டர், கிட்டத்தட்ட வில்லி மாதிரி.

எனவேதான் இந்த படத்தில் நடிக்க த்ரிஷா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதே காரணத்தை சொல்லித்தான் நடிகை எமி ஜாக்சனும் மறுத்துவிட்டார்.

“ஐ” போன்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்துவிட்டு,  உடனே நெகட்டிவ் கேரக்டரில் வில்லியாக நடிக்கவேண்டாம் என அவரது ஆலோசகர்கள் கூறியதால் எமியும் அஜீத் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக  கூறப்படுகிறது.

தற்போது இந்த நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க தன்ஷிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பேராண்மை, மாஞ்சா வேலு போன்ற படங்களில் நடித்து நல்ல நடிகை என பெயர் வாங்கிய தன்ஷிகா, இந்த கேரக்டரில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Actress Shivada Nair Special Interview | Nedunchalai

Exit mobile version