விஜய் இயக்கியுள்ள ‘சைவம்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இரண்டு சவுண்ட் எஞ்ஜினியர்கள் சென்னை வந்துள்ளனர்.
Marti Humphrey மற்றும் Chris Jacobson, ஆகிய இந்த இரண்டு சவுண்ட் எஞ்ஜினியர்கள்களும் இதற்கு முன்பு கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு பணிபுரிந்துள்ளனர்.
இருவரும் ஆறு நாட்கள் சென்னையில் தங்கியிருந்து பின்னணி இசை, மற்றும் சிறப்பு சப்தங்கள் குறித்த தங்கள் ஆலோசனைகளை விஜய்க்கு அளித்துள்ளனர்.
இவர்கள் இருவரது ஆலோசனையால் ‘சைவம்’ படத்தின் ரீ ரிக்கார்டிங் மிகவும் அற்புதமாக வந்திருப்பதாக இந்த படத்தின் சவுண்ட் எஞ்ஜினியர்கள்களாக பணிபுரியும், ராஜாகிருஷ்ணன் மற்றும் குணால் ராஜன் ஆகியோர் கூறியுள்ளனர்.
இந்த படத்தில் சேவல் ஒரு முக்கிய கேரக்டராக நடித்துவருகிறது. சேவலின் கூவல் சப்தத்தை வித்தியாசமாக அமைக்க இரண்டு ஹாலிவுட் எஞ்ஜினியர்களின் ஆலோசனை பெரிதும் உதவியாக இருந்ததாக இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.
விஜய் டிவி லண்டன் நிகழ்ச்சியால் விக்ரம்-ஷங்கர் மோதல்? அதிர்ச்சி தகவல்
20-04-2014
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் படமாக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த பாடலின் படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி ஹாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய ஸ்டுடியோவில் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் படப்பிடிப்பு தேதியில் திடீர் மாற்றம் செய்த ஷங்கர், நேற்று முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவு செய்தார்.
விக்ரம், எமிஜாக்சன், வில்லன் Upen Patel ஆகிய மூவரும் இந்த பாடலில் நடிக்க வேண்டியதிருந்தது. எமி ஜாக்சன், Upen Patel ஆகிய இருவரும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டனர்.
விக்ரம் மட்டும் வரவில்லை. படக்குழுவினர் அனைவரும் விக்ரமுக்காக காத்திருந்தனர். செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்திருந்ததால் விக்ரமை தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஆனால் விக்ரம், இன்று நடக்கவுள்ள விஜய் டிவியின் லண்டன் நிகழ்ச்சிக்காக லண்டனுக்கு விமானத்தில் பயணம் செய்துகொண்டிருப்பதாக தெரிய வந்தது. இந்த தகவலை கேட்டதும் ஷங்கர் அதிர்ச்சி அடைந்தார். விக்ரம் மீது கடுங்கோபம் அவருக்கு ஏற்பட்டதாக படக்குழுவினர் கூறினர்.
அதன்பின்னர் எமி ஜாக்சன் மற்றும் வில்லன் நடித்த காட்சிகளை மட்டும் ஷங்கர் படமாக்கினார். நாளை விக்ரம் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.