கிளிநொச்சியில் தனியார் வங்கியொன்றுக்கு முன்பாக பாரவூர்தியொன்று இன்று காலை குடைசாய்ந்ததால் ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏ-9 பிரதான வீதியில் கொமேர்சியல் வங்கிக்கு அருகில் உள்ள மஞ்சள் கோட்டுப் பகுதியில் தண்ணீர் போத்தல்கள் மற்றும் விறகு என்பவற்றை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்த பாரஊர்தி ஒன்று வீதி மின்கம்பங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகன சாரதி சிறுகாயங்களுக்குள்ளான நிலையிலும், இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த வீதி விபத்து தொடர்பாக கிளிநொச்சி காவல் பணிமனையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.