தேசியபிரச்சினைக்கான தீர்வு முயற்சி என்று வரும்போது அதுபாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே இடம்பெறவேண்டும். இந்தவிடயத்தில் அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைநடத்துவது என்பது சாத்தியமற்றவிடயமாகும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலியரம்புக்வெல தெரிவித்தார்.
அரசியல் தீர்வு என்ற விடயம் வரும்போது அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளக் கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவே பொருத்தமானதாக இருக்கும். இந்த இடத்தில் இரண்டு தரப்புக்கள் மட்டும் பேச்சுவார்த்தைநடத்துவதுபொருத்தமாகஅமையாதுஎன்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கைவிவகாரம் குறித்துஆராய்வதற்காகதென்னாபிரிக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளவிசேடபிரதிநிதிசிரில் ரமபோஷா விரைவில்
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயேஅமைச்சர் கெஹெலியரம்புக்வெலமேற்கண்டவாறு கூறினார்.
இதற்குமுன்னதாகஅமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வாதலைமையிலான
அரசாங்கமட்டஅமைச்சர்கள் குழுவும் இரா. சம்மந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவும் அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு விஜயங்களை மேற்கொண்டு தென்னாபிரிக்க தரப்புக்களுடன் கலந்துரையாடல்களைநடத்தியிருந்தனர்.
சர்வதேசநாடுஒன்றின் ஊடாக அரசாங்கத்துடன் பேச்சுநடத்தத் தயார் என்று கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் கெஹெலியரம்புக்வெலகுறிப்பிடுகையில்
இலங்கைவிவகாரம் குறித்துஆராய்வதற்காகதென்னாரிபிரிக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளவிசேடபிரதிநிதிசிரில் ரமபோஷா விரைவில் இலங்கைக்குவிஜயம் செய்யவுள்ளமைஎனக்குபோதுமானவிடயங்கள் தெரியாது.
ஆமைச்சர் இந்தவிடயம் குறித்துமேலும் குறிப்பிடுகையில்
ஆனால் நல்லிணக்கசெயற்பாடுமற்றும் தேசியபிரச்சினைக்கானதீர்வுவிடயங்கள் குறித்துஅடிப்படைவிடயம் ஒன்றுஉள்ளது. இந்தவிடயம் குறித்துஅரசாங்கத்தின் நிலைப்பாடுமிகவும் தௌிவானதாகும்.
அதாவது தேசியபிரச்சினைக்கான தீர்வுமுயற்சிஎன்றுவரும்போதுஅதற்குஎவ்வாறானபின்னணிகள் அமைக்கப்பட்டாலும் தீர்வுஎன்பதுபாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே இடம்பெறவேண்டும். அனைத்துக் கட்சிகளும் பங்குகொள்ளக்கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாகவேதீர்வைஅடையமுடியும்.
எனவேஅரசியல் தீர்வை அடையவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குவரவேண்டியதுஅவசியமாகும். தற்போதைய நிலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழுநியமிக்கப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ளுமாறு கூட்டமைப்பை அழைத்துள்ளோம்.
இதனை விடுத்து தீர்வுவிடயத்தில் அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைநடத்துவதுஎன்பதுசராத்தியமற்றவிடயமாகும்.
அவ்வாறு கூட்டமைப்பும் அரசாங்கமும் தனித்து பேச்சுவார்த்தைநடத்தமுடியாது. தீர்வு வி்டயத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு வருவதேசிறந்தவி்டயமாக அமையும்.
இந்தவிடயத்தில் எவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே தீர்வு யதார்த்தமானதாகும் சாத்தியமானதுமாக அமையும் என்றார்.
வடக்கில் இராணுவத்தைப் பலப்படுத்த வேண்டும் சர்வதேசத்தின் உதவியை நாடி நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. தெரிவுக் குழுவில் பங்கேற்றால் மட்டுமே கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தமிழர்களை காப்பாற்ற இராணுவத்தை பலப்படுத்த வேண்டும் .
இலங்கையில் சுட்டிக்காட்டுமளவிற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.
இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்திற்கு அழைக்கின்றோம்.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பிரச்சினைகள் இருக்கின்றதெனின் அதை இரு தரப்பினருமே பேசி தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
இரு தரப்பு பிரச்சினைகள் என்னவென்பதை முழுமையாக இரு சாராரும் அறியாது சர்வதேசத்தை நாடுவதில் எவ்விதப் பயனும் இல்லை.
அரசாங்கம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து இன்று நாட்டில் அமைதியை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்தை இலங்கைக்கு எதிராக திசை திருப்பி நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
சர்வதேச தலையீடுகளுக்கு ஒரு போதும் நாம் இடமளிக்கப் போவதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் அதற்கான ஒரே இடம் பாராளுமன்ற தெரிவுக் குழுவே ஆகும்.
தெரிவுக் குழுவிற்கு வந்தால் மாத்திரமே கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அரசாங்கத்தின் இறுதியான முடிவும் இதுவே ஆகும். இதில் ஒரு மாற்றமும் இல்லை.
முப்பது வருட கால கொடிய யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்தமை சுலபமான விடயம் அல்ல. பல ஆயிரக்கணக்கிலான உயிர் தியாகங்களையும் இழப்புகளையும் சந்தித்தே தீவிரவாதத்தை முடிவிற்கு கொண்டு வந்தோம்.
எனினும் இன்று ஜெனீவா மூலம் இலங்கைக்குள் மீண்டும் தீவிரவாதம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு வெளியில் இருக்கும் விடுதலைப்புலி தீவிரவாதிகளின் உதவியுடனும் பிரிவினைவாதக் கட்சிகளின் ஆதரவுடனும் வடக்கு கிழக்கில் மீண்டும் புலித் தீவிரவாதம் உருவாக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு தமிழ் மக்களை பகடைக் காய்களாக பயன்படுத்தி மீண்டும் குழப்பத்தினை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது. இன்று வடக்கில் இராணுவத்தை குறைத்தமையே விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக காரணமாக அமைந்துள்ளது.
தமிழ் மக்களையும் இந்த நாட்டையும் காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கில் இராணுவத்தை பலப்படுத்த வேண்டும். இராணுவத்தினால் மட்டுமே வடக்கை பாதுகாக்க முடியும். அதே போல் வடக்கில் உள்ள மக்கள் இன்று இராணுவத்தினருடன் இணைந்து வாழ்கின்றனர்.
எனவே அதை சாதகமாக பயன்படுத்தி தீவிரவாதத்தை அடியோடு அழித்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.