ilakkiyainfo

கிளிநொச்சியில் நால்வர் கைது // இளம் பெண் கடத்தல் : ஒருவருக்கு விளக்கமறியல்: 6 பேருக்கு பிணை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது போலியான இறப்பர் முத்திரை மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இளம் பெண் கடத்தல் : ஒருவருக்கு விளக்கமறியல்: 6 பேருக்கு பிணை
22-04-2014
index
மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண் உட்பட 6 பேரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரபிணையில் செல்லவும், பிரதான சந்தேக நபரை மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று(22) உத்தரவிட்டார்.

அத்துடன், மேற்படி நபர்களின் வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் சான்றிதழை கிராம அலுவலரிடம் பெற்று தம்மிடம் சமர்ப்பிக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவையும், குறித்த வாகனத்தின் சாரதியினையும் கடத்தப்பட்ட பெண்ணையும் இன்று (22) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

பாலியல் துஷ்பிரயோகம் :ஆசிரியரை தேடி பொலிஸார் வலைவீச்சு
22-04-2014
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் ஐந்து பேரை   துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியரை  பொலிஸார் தேடி வருகின்றனர்.

பத்து வயதுடைய மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியரே இவ்வாறு குறித்த மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

Exit mobile version