இணையத்தள விளையாட்டுகளில் மகன் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததால் சினமடைந்த தந்தையொருவர் மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.
நாபோன் நகருக்கு அண்மையிலுள்ள லக்-சர் ஒர்டாயு கிராமத்தைச் சேர்ந்த 52 வயது தந்தையே இணையத்தள விளையாட்டு தொடர்பில் இடம்பெற்ற கடும் வாக்குவாதத்தையடுத்து தனது மகனை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
திங்கட்கிழமை நள்ளிரவை அண்மித்தவேளையில் இடம்பெற்ற இந்தப் படுகொலை குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
தந்தை மறுநாள் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டக் காரணங்களுக்காக தந்தையினதும் மகனதும் பெயர்கள் வெளியிடப்படவில்லை.