செக் குடியரசில், ரயில் கடவையை கடக்க முயன்ற 77 வயது முதியவர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு எவ்வித பாதிப்பும் இன்றி உயிர்த்தப்பிய சம்பவம் தொடர்பான CCTV காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
செக் குடியரசின் ரேஜெக் ஜெஸ்ட்ரிபை பிரதேசத்தில் அமைந்துள்ள ரயில் மார்க்கத்தில் குறித்த நபர் ரயில் வருவதை அறிந்தும் கடவையை விரைவாக கடந்து செல்ல முற்படும் காட்சி இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் ரயிலில் அவர் மோதினாலும், காலில் மாத்திரமே சிறிதளவு காயமேற்படுகிறது. பெரியளவில் எவ்வித பாதிப்பும் இன்றி அவர் உயிர்த்தப்பியுள்ளார்