ilakkiyainfo

வெளிநாட்டிலுள்ள மனைவிக்கு, முருங்கைக்காய் அனுப்புவதற்கு மரத்தில் ஏறி பறிக்க முயன்ற நபர், கிணற்றில் வீழ்ந்து மரணம்

வெளிநாட்டிலுள்ள தனது மனைவிக்கு அனுப்பவென முருங்கக்காய் பறிக்கச் சென்ற கணவரொருவர் முருங்கை மரக்கிளையுடன் அருகிலுள்ள கிணறொன்றில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இப்பாகடுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்பாகடுவ இப்பயவ பிரதேசத்தைச் சேர்ந்த சரத்காமிணி ராஜபக்ஷ என்ற 57 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

மரண விசாரணையில் சாட்சியமளித்த காலஞ்சென்றவரின் மைத்துனர் கூறியதாவது, ‘காலஞ்சென்றவரின் மனைவி எனது சகோதரியாவார். நாங்கள் இருவரும் குவைத் நாட்டில் பணி புரிகின்றோம். நான் விடுமுறைக்கு இலங்கை வந்தேன்.

எனது சகோதரி இலங்கை காய்கரி சாப்பிட விரும்புகிறார் என கூறியபோது எனது மைத்துனர் பலா ஈரப்பலா போன்றவற்றை சேகரித்ததுடன் பின் வீட்டில் முருங்கைக்காய் இருக்கிறது. நான் சென்று பறித்து வருகின்றேன் எனக் கூறிக் சென்றார்.

வெகு நேரமாகியும் திரும்பாததால் நான் சென்று பார்த்தேன். முருங்கை மரக்கிளையொன்று முறிந்து கிடந்தது. நான் அருகே சென்ற பார்த்த போது அவரைக் காணவில்லை.

அருகில் தகரத்தால் மூடப்பட்ட கிணறு இருந்தது. தகரங்கள் உடைந்து காணப்பட்டன. உள்ளே கிணற்றை பார்த்த போது ஒருவர் மிதப்பது தெரிந்தது.

அயலவர்களின் உதவியுடன் அவரை மீட்ட போது எனது மைத்துனர் என அடையாளம் கண்டேன். அவரை கொக்கரெல்ல வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம்.

அங்கு வைத்தியர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்’ இவ்வாறு அவர் கூறினார். மரண விசாரணை அதிகாரி விபத்து மரணமெனத் தீர்ப்பளித்தார்;.

மனைவி இறந்த சோகத்தில் கணவன் அசிட் அருந்தி தற்கொலை
23-04-2014

dead-body-f_4_9யாழ். இணுவில் பகுதியில் மனைவி இறந்த சோகம் தாங்காது கணவனும் அசிட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 50 நாட்களுக்கு முன்னர் யாழ். இணுவில் பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

கீர்த்திகா என்ற 16 வயதுடைய இந்த இளம் குடும்ப பெண்ணின் தற்கொலைக்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரது கணவர் பொலிஸாரினால் தொடர்ந்து விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவனும் நேற்று  மது போதையில் அசிட்டை எடுத்து அருந்தியுள்ளார்.

அதேவேளை உயிரழந்தவரின் உடலில் பெண்ணின் பெயர் அசிட்டினால் எழுதப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த 25 வயதுடைய வசீகரன் என்ற குடும்பஸ்தராவார்.

இவருடைய மனைவி திருமணமாகி 20 ஆவது நாள் வீட்டில்  சேலையில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version