இலங்கையில் பௌத்த கடும்போக்கு அமைப்புக்களால் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அங்கு மத சகிப்பின்மை அதிகரிப்பதை காண்பிப்பதாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
கௌதம புத்தரின் உருவத்தை தனது கையில் பச்சை குத்தியிருந்த பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டமை, ஒரு அரச அலுவலகத்தில் கடும்போக்கு பௌத்த அமைப்பு ஒன்று பலவந்தமாக நுழைந்து, மிதவாத பிக்கு ஒருவரை தேடியமை போன்ற கடந்த வாரச் சம்பவங்கள் இதற்கு உதாரணமாகக் காண்பிக்கப்படுகின்றன.
இவை குறித்த பிபிசியின் காணொளி.