நடிகை அமலாபாலும் – இயக்குனர் விஜய்யும் ஒருவரை ஒருவர் பலமாதங்களாக காதலித்து வந்ததாக தகவல் பரவியது.
அமலாபாலும், தான் விஜயை காதலிப்பது உண்மை தான் என்பதை ஒப்புக்கொண்டார் பின்னர் திருமணம் மற்றும் நிச்சயதார்த்த திகதிகளையும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் திருமணத்தில் ஒரு சிக்கல் எழும்பியுள்ளது. அமலாபால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர், விஜய்யோ செட்டியார், இந்து மதத்தை சேர்ந்தவர்.
திருமண திகதி குறிக்கும் வரை மதத்தை பற்றி கவலை படாத அமலாபாலின் பெற்றோர் இப்போது ஒரு புதிய புதிரை போட்டுள்ளார்களாம்.
விஜய்யை கிறிஸ்துவ மதத்திற்கு மாறும் படி வற்புறுத்தி வருகின்றனராம், ஆனால் விஜய்க்கோ இவ்விஷயத்தில் விருப்பமில்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாராம்.
மீண்டும் சூர்யா – நயன்
வெங்கட்பிரபு இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் நடிகை நயன்தாரா. லிங்குசாமி இயக்கும் அஞ்சான் திரைப்படத்தைக் கிட்டத்தட்ட முடித்துக் கொடுத்துவிட்டார் சூர்யா. சில காட்சிகள் மட்டும்தான் எஞ்சியுள்ளன.
இதற்கடுத்து சூர்யா, வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான பூஜையும் சமீபத்தில் போடப்பட்டது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் ஸ்ருதிஹாசனிடம் பேசினார்களாம்.
ஸ்ருதி இப்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு நடிகையைத் தேடியவர்களுக்கு, நயன்தாரா பொருத்தமான சொய்ஸாகத் தெரிந்தாராம்.
எனவே நயன்தாராவையே சூர்யாவிற்கு ஜோடி சேர்க்க முடிவு செய்துள்ளனர். இதற்குமுன் கஜினி படத்திலும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ஆதவன் படத்திலும் சூர்யாவும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளனர்.
நயன்தாரா இப்போது ஜெயம் ரவியுடன் ஒரு படம், உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.