ilakkiyainfo

ரூ 5 கோடி தங்க நகைகளுடன் ஜொலிக்கும் ருத்ரமா தேவி!

ருத்ரமாதேவி படத்துக்காக நடிகை அனுஷ்காவுக்கு ரூ 5 கோடி மதிப்பில் பிரத்தியேகமாக தங்க நகைகள் செய்துள்ளனர் அப்படத்தின் தயாரிப்பாளர்கள். ருத்ரமாதேவி என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. தமிழிலும் இதே பெயரில் இப்படம் வருகிறது. இதில் ருத்ரமாதேவி ராணியாக அனுஷ்கா நடித்துள்ளார்.25-1398422427-rudrama-devi-movie-stills-6
பயிற்சிகள்
சண்டைக் காட்சிகள், போர்க்கள காட்சிகள் நிறைந்த இந்தப் படத்துக்காக கத்திச் சண்டை, குதிரை ஏற்றம் என பல பயிற்சிகளை எடுத்தார் அனுஷ்கா. பல புதிய படங்களையும் கூட தவிர்த்தார்.
தங்க நகைகள்
ராணி கேரக்டர் என்பதால் அனுஷ்காவுக்கு பிரத்யேகமாக தங்கத்தில் நகைகள் வடிவமைத்துள்ளனர். வழக்கம்போல ‘சினிமா நகைகளை’ அணிவிக்காமல் ரூ.5 கோடிக்கு நிஜ தங்க நகைகளையே வாங்கியுள்ளனர். இந்தப் படத்தில் அனுஷ்கா அணிந்துள்ள அவ்வளவு நகைகள், கிரீடங்கள் அனைத்துமே தங்கத்தாலானவை என்கிறார்கள்.
குணசேகர்
இந்த படத்தில் அனுஷ்காவுடன் ராணா உள்பட முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர். குணசேகர் இயக்குகிறார். ருத்ரமாதேவி படம் தன் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமையும் என நம்புகிறார் அனுஷ்கா.
இளையராஜா
பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு இசைஞானி இளையராஜாவின் இசையாகும்.
நடிகர் சந்தானத்தின் ‘முதலாளி’ யார் தெரியுமா?
25-04-2014
சென்னை: நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலினை முதலாளி என்று தான் அழைப்பாராம். தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவானார். அந்த படத்தில் அவருடன் சந்தானம் நடித்திருந்தார். அவர்கள் இருவரின் காம்பினேஷன் நன்றாக ஒர்க் அவுட் ஆனது. இதையடுத்து அவர்கள் இது கதிர்வேலன் காதல் படத்திலும் சேர்ந்து நடித்தனர்.
அறிமுகம்
திமுக ஆட்சியில் இருந்தபோது தான் உதயநிதி ஸ்டாலின் சந்தானத்திற்கு அறிமுகமானாராம்.

பவர்ஃபுல் குடும்பம்
பவர்ஃபுல் குடும்பத்தில் இருந்து வருவதால் உதயநிதியை சந்தானம் முதலாளி என்று அழைத்துள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி அதையடுத்து இது கதிர்வேலன் காதல் படப்படிபிடிப்புகளிலும் சந்தானம் உதயநிதியை முதலாளி என்றே அழைத்துள்ளார்.

உதயநிதி
என்னை முதலாளி என்று அழைக்காதீங்க என்று உதயநிதி எத்தனையோ முறை கூறியும் சந்தானம் கேட்கவில்லையாம். நீங்க சொல்வதை சொல்லுங்க நான் முதலாளி என்று தான் அழைப்பேன் என்று அழைக்கிறாராம்.
முதலாளி
சந்தானத்திற்கு வெகுநாளாக தலைவலியாக இருந்த சொத்து பிரச்சனை ஒன்றை உதயநிதி தீர்த்து வைத்துள்ளார். அதனால் நட்பு, மரியாதை, நன்றிக்கடன் ஆகியவற்றால் சந்தானம் உதயநிதியை முதலாளி என்று தொடர்ந்து அழைக்கிறாராம்.
Exit mobile version