கனடாவின் கிழக்கு கடற்கரையிலுள்ள நியூபவுண்ட்லான்டில் நீல திமிங்கிலமொன்று அழுகிய நிலையில் கரையொதுங்கியுள்ளது.
28 யார் நீளமான இந்த திமிங்கிலத்தின் உடல் அழுகி உருக்குழைந்து வீங்கியுள்ளதால் அது எப்போதும் வெடித்து பெருமளவு மெதேன் வாயு வெளியேறலாம் என பிரதேசவாசிகள் கவலை அடைந்துள்ளனர்.
அத்துடன் மேற்படி 60 தொன் நிறையுடைய அழுகிய திமிங்கிலம் வெடிக்கும் போது அதன் உடலிலுள்ள மனித நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பற்றீரியா நகரமெங்கும் பரவலாகம் என்ற அச்சமும் தோன்றியுள்ளது.
சிரிய தீவிரவாதிகளால் கிளர்ச்சியாளர்கள் இருவருக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை
வட கிழக்கு சிரியாவிலுள்ள தீவிரவாதிகள் தமது குழு உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் முகமாக இரு கிளர்ச்சியாளர்களுக்கு பகிரங்கமாக சிலுவையில் அறைந்து மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.
அவரது சடலங்களை சுற்றி இந்த நபர் முஸ்லிம்களுக்கு எதிராக போராடியதுடன் இந்த இடத்தில் கைக்குண்டொன்றையும் வீசியுள்ளார் என்ற வாசகம் எழுதப்பட்ட துணி சுற்றப்பட்டிருந்தது.
மேற்படி கிளர்ச்சியாளர்களும் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.