ilakkiyainfo

வன்னி பெண்களின் வறுமையை, விலை பேசும் “ரெலோ” எம்.பி செல்வம் அடைக்கலநாதன்! (அதிர்ச்சி தகவல்கள்)

ரெலோ எம்.பி  செல்வம் அடைக்கலநாதனிடம்  உதவி என்று  கேட்டு சென்ற  வன்னி  பெண்களுக்கு  நடந்த கொடுமை..
வன்னியில்  வறுமையின்  கீழ்   வாழுகின்ற  சில  இளம்பெண்கள்   ‘ரெலோ எம்.பி  செல்வம்  அடைக்கலநாதனிடம்’ உதவி  கேட்டு  சென்றபோது.. அப்பெண்களை  10,000 ரூபா முதல் 100000  ரூபா வரை  விலைபேசி  ஆடை கழட்டி பார்த்த பின்பு தான், உதவி செய்ததாகவும்…..,இந்த அனியாயத்தை யாருமே தட்டிக் கேட்க மாட்டீர்களா? என  மனக்குமுறல்களுடன்  ‘முகநூல்’ மூலம் எம்முடன் தொடர்பை ஏற்படுத்தி ரெலோ எம்.பி  செல்வம் அடைக்கலநாதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கேட்டதற்கமையவும், தகுந்த ஆதாரங்ககள்  கிடைக்கப்பட்டதன் அடிப்படையிலேயே  இந்த  குற்றசாட்டுகள் சம்பந்தமான விபரங்களை  நாம் பிரசுரிக்கின்றோம்.  வேறெந்த நோக்கமும் எமக்கு கிடையாது.
ரெலோ எம்.பி  செல்வம் அடைக்கலநாதனிடம் உதவிகேட்டு…. சென்ற பெண்கள் ‘பாலியல் பேரம்’ (விலை) பேசப்பட்டு, உதவி செய்ப்பட்டதாகவும், தாங்கள் பாதிக்கபபட்டது போன்று மற்றைய பெண்களும் ‘ரெலோ  எம்.பி  செல்வம் அடைக்கலநாதனால்’ பாதிப்படைய கூடாது   என்கின்ற நல்ல மனப்பான்மையிலேயே தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்ட முன்வந்துள்ளார்கள்.
“உதவி கேட்டுச் சென்ற 18 வயது பெண்ணொருவரை கூட இவர் விட்டு வைக்கவில்லை” எனவும் குமுறுகிறார்கள். “ஈழ மண் விடுதலைக்காக  நாங்கள் கொடுத்த விலை அதிகம்.ஆனால் அதில் இன்று எத்தனை எலிகள் புலிவேசம் போட்டு  ‘தமிழச்சியைத்  தமிழனே ‘ஆள’ வேண்டுமென நினைக்கிறார்கள்.  இவர் பிடியில் ஒரு சில முன்னாள் பெண் போராளிகள் இருக்கின்றார்கள்”  எனவும்  எழுதியுள்ளார்கள.
தனது மனைவி, பிள்ளைகளை பத்திரமாக இந்தியா, லண்டனில் போன்ற  நாடுகளில்  பாதுகாப்பாக வைத்துக் கொண்டு..  ‘தமிழர்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு,  புலம்பெயர் தமிழர்களின் பணங்களை பெற்றுக் கொண்டு.. இப்படிப்பட்ட கேவலமான காரியங்களை எம்.பி  செல்வம் அடைக்கலநாதன் செய்யலாமா? 2005 ம் ஆண்டு  முல்லைத்தீவு பெண் ஒருவர் (ஜெயசீலி என்பவர்) இவரால்  கொலை செய்யபட்டு இருக்கின்றார் என்ற தகவலும் உள்ளதாகவும் எழுதியுள்ளார்கள்.
“தமிழர்களின் உரிமைக்காக.., தமிழர்களின்  நலன்களுக்காக.., தமிழர்களின்  விடுதலைக்காக  போராடுகின்றோம்”  என்ற போர்வையில்  தமிழர்களின்  வாக்குகளை  பெற்றுக்கொண்டு  ‘பதவிகளையும் பணத்தையும்’  வைத்துக் கொண்டு  இப்படி தமிழ் பெண்களையே சீரழிக்கலாமா??

இதில் என்னகொடுமை என்றால்.. பாதிக்கப்பட்ட இப்பெண்கள் யாரிடமும் தங்களுக்கு  நடந்த இக்கொடுமையை சொல்லவும் முடியாது, பொலிஸில் கூட சென்று முறையிடக் கூட முடியாது.

அப்படி  எதாவது நடந்தால் வன்னியில்   இப்பெண்கள் காணாமல் போய் விடுவார்கள். இராணுவத்தினரால் கூட யாராவது கடத்தப்பட்டால் தமிழ் பத்திரிகைகளில்   கொட்டை எழுத்தில் செய்தியாக போடுவார்கள்.

ஆனால் ரெலோ போன்ற அமைப்பினர் வன்னியில் எதையும் செய்யலாம். ஏன்என்றால்.. ரெலோ அமைப்பினர் “தமிழ் தேசியத்துக்குள் புகுந்திருப்பதால்” அவர்கள் புனிதா்களாகவே  கருதப்படுகின்றார்கள்.
முன்னாள் பெண் போராளிகளை  சிறிலங்கா இராணுவத்தில் இணைத்து கொள்வதை.. ‘தாங்கள் கட்டிக்காத்த தமிழினத்தின் கௌரவத்தை’ இராணுவத்தினர்கள் விலைபேசி வாங்கிக் கொள்ளுகின்றார்கள்?   என்கின்ற  மனோரீதியில்    சதா பத்திரிகைகளில் அறிக்கை விட்டு “தாங்கள் தான் தமிழினத்தின் பாதுகாவலர்கள்” என காட்டிக் கொள்ளும் கூட்டமைப்பு  எம்.பி க்கள்.. ‘செல்வம் அடைக்கலநாதன் எம்.பி’ னால் சீரழிக்கபட்ட,  சீரழிக்கப்படும்   இப்பெண்ககைளை காப்பாற்றமுன் வருவார்களா?
இதேவேளை இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக “ஆதாரங்களுடன்” முகநூல் மூலம் சம்பத்தப்பட்ட பெண்களின் தரப்பால் “ரெலோ” பிரமுகர்களுக்கும் அனுப்பப் பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து…..”ரெலோ” நண்பர்கள் சிலர், இந்த குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக “ரெலோ” எம்.பி செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் கேட்டு, பிரச்சினைப் பட்டதாகவும், அதற்கு “ரெலோ” எம்.பி செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், “இப்படங்கள் என்னுடையது தான் எனவும், ஆயினும் நான் எந்தவொரு பெண்ணிடமும் தவறாக நடக்கவில்லை” எனவும் கூறி சமாளித்து உள்ளார்.
“ரெலோ” எம்.பி செல்வம் அடைக்கலநாதன் அவர்களே… உங்களின் அந்தரங்கப் படங்கள் எவ்வாறு வெளியில் சென்றது? நீங்கள் யாருக்கு இதனை அனுப்பினீர்கள்?? அனுப்பியதன் காரணம் என்ன?? விளக்கம் தர முடியுமா??*உண்மை நிலமை என்னவென்று சம்பந்தப்பட்டவாகள் தான் விளக்கமளிக்க வேண்டும். எந்த தரப்பினரின் நியாயபூர்வமான விளக்கங்களும் எம்மால் பிரசுரிக்கப்படும்.
எமக்கு கிடைக்கப் பெற்ற செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் அந்தரங்க படங்களை  (சிலவற்றை மட்டும்) நாம் பிரசுரிக்கின்றோம். இதைவிட முக்கிய ஆதாரங்கள் வேறுபல  நம்மிடமுண்டு… தேவையேற்பட்டால் அவற்றையும் பிரசுரிப்போம்.015a

 

Exit mobile version