கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தேரர் ஒருவர் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக அந்த பிரிவால் விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் படி நேற்றைய தினம் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு தெளஹீத் ஜமா அத்தின் செயளாலருக்கு நீதிமன்ரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அதன் படி பிரதிவாதியான குறித்த அமைப்பின் செயலாளர் அப்துர் ராஷிக் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் அவர்சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரணவக தலைமையில் எஸ்.பீ.ஹபீல்,சப்ராஸ் ஹம்ஸா, ரமீஸ் பஸீர் ஆகியோர் உள்ளடங்கிய சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்தது.
முறைப்பாட்டாளர் தரப்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்க , கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் ஆஜராகியிருந்ததுடன் தேரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்தது.
இதன் போது மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய பிரதிவாதியினால் இணையத்தளத்துக்கு வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் புத்தர் மனித மாமிசம் சாப்பிட்டதாகவும், புத்தர்கள் மூன்ரு மாணிக்கங்கள் எனக் கூரி கல்லை வணங்கும் மடையர்கள் எனக் கூரி முழு பெளத்த சமூகத்தையும் ஆத்திரத்துக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருப்பதாக குறிப்பிட்டார்.
இதனிடையே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன நாயக்க, முறைப்பாட்டுக்கு அமைவாக அனைத்து ஆதாஅரங்களையும் திரட்டி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சட்ட மா அதிபரின் உதவியையும் நாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இதன் போது குறுக்கிட்ட சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெள்ஹீத் ஜமா அத் ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும் அதனை தடை செய்ய வேண்டும் எனவும் மன்றை கோரினார். வெளி நாட்டிலிருந்து அந்த அமைப்பு நிதி பெறுவதாகவும் இதன் போது அவர் குற்றம் சுமத்தினார்.
இதனை அடுத்து அதனை நிராகரித்த தெளஹீத் ஜமா அத் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ரணவக அவ்வாறு நிதி பெறுவதென்பதை முடிந்தால் நிறூபிக்குமாரு சவால் விடுத்தார்.
அத்துடன் தமது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறும் அவர் கோரினார். எனினும் அதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
எனினும் இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய பிரதிவாதிக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்தார்.
அத்துடன் பிரதிவாதியின் கடவுச் சீட்டை தேசிய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட அவர் ஒவ்வரு வெள்ளிக்கிழமையும் பிரதிவாதி பிற்பகல் இரண்டு மணிக்கு கையொப்பமிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அத்துடன் தெளஹீத் ஜமா அத்தின் ஏனைய பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சென்று வாக்கு மூலம் அளிக்குமாரும் அவர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து அந்த வழக்கான து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
வெள்ளை வேனில் பொலிஸாரை கடத்திச்சென்று துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்; குருணாகல் பகுதியில் சம்பவம்
குருணாகல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துப் பிரிவு கான்ஸ்டபிள்கள் இருவர் வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டு அவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவர் பலத்த காயங்களுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த திடுக்கிடும் சம்பவம் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெள்ளை வேனில் வந்த மூன்று பேருக்கும் மேற்பட்டவர்கள் இரு கான்ஸ்டபிள்களையும் கடத்திச் சென்றதுடன். பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரினதும் உத்தியோகபூர்வ சீருடைகளையும்
களைந்து அபகரித்து சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குருணாகல் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளான சந்தன சம்பத் என்ற 42 வயதுடையவரே கொல்லப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர் அதே பொலிஸ் பிரிவின் கான்ஸ்டபிளான அஜித் வீரசூரிய எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் நேற்று மாலை வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிராத நிலையில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கமைய கொழும்பிலிருந்து குருணாகலுக்கு சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ரணவீர தலைமையிலான விஷேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரை விட வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறியின் மேற்பார்வையின் கீழ் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சம்பவம், தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தகவல் தருகையில்.
குருணாகல் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள்களான சந்தன சம்பத், அஜித் விஜேசூரிய ஆகியோர் தமது கடமையின் பொருட்டு நேற்று முன் தினம் இரவு குருணாகல் நகரை அண்மித்த பிரதேசத்தில் தம்புள்ளை – குருணாகல் வீதியில் கடமையினை செய்துள்ளனர்.
கடமைக்கு செல்லும் போது குறித்த கான்ஸ்டபிள்கள் இருவரும் கைத்துப்பாக்கி ஒன்றினையோ அல்லது ‘வோக்கி டோக்கி’ கருவியினையோ கொண்டு சென்றிருக்கவில்லை. எனினும் கடமையில் இருந்த போது கடமையின் நிமித்தம் இரு தடவைகள் அவர்கள் பொலிஸ் நிலையத்துடன் தமது கையடக்கத்தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.
இந் நிலையில் அதிகாலை ஒரு மணியளவில் தம்புள்ளை பகுதியில் இருந்து குருணாகல் பகுதியை நோக்கி வெள்ளை வேன் ஒன்று வந்துள்ளது.
அத்துடன் கொலை செய்யப்படுவதற்கு முன் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தியோக பூர்வ ஆடைகளும் களையப்பட்டு சந்தேக நபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.
இதனை அடுத்து மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிளான அஜித் விஜேசூரிய மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள சந்தேக நபர்கள் தயாராகியுள்ளனர்.
இதனை அடுத்தே சந்தேக நபர்கள் அஜித் விஜேசூரியவை தாக்கிவிட்டு அங்கிருந்து வேனில் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து ஒருவாறு மீண்டு பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அழைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் காட்டுக்கு வெளியே வந்து கிராம மக்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தை சுர்றி வளைத்த பொலிஸார் ரீ 56 ரக துப்பாக்கியின் தோட்டக்கள் பலவற்றை மீட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று அதிகாலை 2.15 மணியளவில் மீரிகம பகுதியில் வேனில் வந்த ஆயுதம் தரித்த கொள்ளையர்களால் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த கொள்ளையை மேற்கொண்டவர்களால் கொள்ளைக்கு முன்னர் இந்த கொலை, கடத்தல் நாடகம் நடத்தப்பட்டதா? எனவும் பொலிஸார் விசாரணை செய்து வருகிறனர்.
எவ்வாறாயினும் இந்த சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளனர். இந்த கடத்தல், கொலையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
அதன் படி தகவல்களை குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜந்த சமரகோனின் தொலைபேசி இலக்கமான 07774784648 என்ர இலக்கத்துக்கு வழங்குமாறு நாம் கோறுகின்றோம்.
அத்துடன் இறந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தன சம்பத்தை பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்த பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
யுத்ததின் பின்னர் உயிர் துறந்துள்ள ஏழாவது பொலிஸ் உத்தியோகத்தரான சந்தன சம்பத் தனது 22 ஆவது வயதில் பொலிஸ் சேவையில் இணைந்திருந்தார். அவருக்கு 13,10 வயதுகளில் இரு பிள்ளைகள் உள்ளனர்.
அத்துடன் மின்னேரியா, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, சிலாபம், முந்தல், மன்னார் ஆகிய பொலிஸ் நிலையங்களில் சேவை செய்த பின்னரேயே அவர் குருணாகலுக்கு இடமாற்றம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் தலைமையகத்தின் தகவல்களின்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இவ்வாண்டின் இதுவரை யான காலப்பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 140 சம்பவங்கள் பதிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
குருநாகல் பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை: தப்பிய அதிகாரி வாக்குமூலம் (வீடியோ)