வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் குயில்வத்தை தோட்டத்தில் 16வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று 08.05.2014 அன்று மாலை 4.30 மணியளிவில் இடம் பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
16வயதான புஸ்பநாதன் சாரதா என்ற சிறுமியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வட்டவளை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி குயில்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி கற்று வருவதோடு 08.05.2014 அன்றைய தினம் பாடசாலை விட்டு வந்து மாலை நேரத்தில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் சடலம் வட்டவளை வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுப்பப்பட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த சிறுமியால் எழுதபட்டிருந்த கடிதம் ஒன்றையும் வட்டவளை பொலிஸார் மீட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி பாடவேளையின் போது தாள் ஒன்றில் பாடல் எழுதி கொண்டிருந்ததாகவும் அதனை இணங்கன்ட ஆசிரியர் ஒருவர் இதனை செய்யவேண்டாம் நீ சென்று நாளை பாடசாலைக்கு வரும்போது உங்கள் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து வரும்படி ஆசிரியர் கூறி இருந்ததாகவும்…..
இதற்கு என்னை எனது நண்பர்கள் கேலிசெய்ததாகவும் இதன் காரணமாக எனக்கு மனசங்கடம் ஏற்பட்டதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறித்த சிறுமி தன் கையெழுத்து மூலமாக எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதே வேலை சிறுமியின் தந்தை புஸ்பநாதனிடம் நாம் கேட்டபோது நானும் எனது மனைவியும் 08.05.2014 அன்று மாலை விறகு சேகரிப்பதற்காக சென்று இருந்தோம். விறகு சேகரித்து விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது தான் எனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டால்.
ஆனால் எங்கள் குடும்பத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென குறித்த சிறுமியின் தந்தை புஸ்பநாதன் தெரிவித்தார். இதே வேளை குறித்த ஆசிரியையை நாம் சந்திப்பதற்காக பாடசாலைக்கு சென்று இருந்த வேலை ஆசிரியர் விடுமுறை பெற்று சென்றுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் நடராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவன் துஷ்பிரயோகம் – பொலிஸாருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்.
ஏழு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக, பொலிஸார் முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் அலுத்கம பொலிஸார் பாரபட்சம் காட்டுவதாக, அலுத்கம நகரில் நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் தாயுடன் கடைக்குச் சென்றிருந்த வேளை குறித்த சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.
தாம் கடையில் பொருட்களை தேர்வு செய்து கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒருவரால், தனது மகன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக தாய் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் சிறுவன் சிறுநீர்கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதனால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவனது பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காது, இரு தரப்பினரும் சமாதானத்துடன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளமையால், சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடைக்கு தீ வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.