நைஜிரியா நாட்டில் உள்ள போகோஹாராம் என்ற தீவிரவாத அமைப்பு தனிநாடு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் நைஜீரிய பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்தி அந்த நாட்டையே நடுநடுங்க செய்தது.
கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க நைஜிரிய அரசு உலக நாடுகளின் உதவியோடு தீவிர முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் தீவிரவாதிகள் மீண்டும் நாட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளனர். நேற்று நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு பாலத்தை குண்டு வைத்த தகர்த்த அவர்கள், அந்த பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து அதிகாரியின் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளையும் கடத்தியுள்ளனர்.
இதனால் நைஜீரியா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
நைஜீரிய தீவிரவாதிகளிடம் இருந்து கடத்தப்பட்டவர்களை மீட்க அமெரிக்கா, கனடா, மற்றும் பல நாடுகள் நவீன தொழில்நுட்பங்கள் வாய்ந்த கருவிகளையும், சில வீரர்களையும் அனுப்பியுள்ளது.
தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தியதால் ஆத்திரம் கொண்ட தீவிரவாதிகள் மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கடத்தப்பட்டவர்களை சீரழித்து கொலை செய்வதோடு மேலும் பல முக்கிய வி.ஐ.பி பெண்களை கடத்துவோம் என தீவிரவாதிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்