பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு இந்தியாவில் உள்ள ஒரு தனியார் அமைப்பு வித்தியாசமான தண்டனையை கொடுத்து வருகிறது. இதனால் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள் நடுக்கத்தில் உள்ளனர்.
மும்பையில் Clean India என்ற தனியார் அமைப்பு ஒன்று பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது வேகமான நீரை பாய்ச்சி அவர்களை திக்குமுக்காட செய்து வருகின்றனர்.
இதற்கெனவே காவல்துறையினர் வைத்திருப்பது போன்ற தண்ணீர் நிரப்பிய லாரி ஒன்றை இந்த அமைப்பு வாங்கியுள்ளது. இந்த லாரி, மும்பையின் முக்கிய இடங்களை சுற்றி வருகிறது.
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களை பார்த்தால் போதும் உடனடியாக அவர்கள் மீது வேகமாக நீரை பாய்ச்சி அவர்களை நிலைதடுமாற செய்துவருகிறது. இதனால் மும்பையில் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பு கூறுவதாவது, “சிறுநீர் கழிக்க என்று கட்டணக்கழிவறைகள் மற்றும் இலவச கழிவறைகள் பலவற்றை அரசு அமைத்து கொடுத்திருந்தபோது, அவற்றை பயன்படுத்தாமல் விலங்குகள் போன்ற சாலையில் உள்ள சுவரோரங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்கவே நாங்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
இந்த நடவடிக்கை சட்டப்படி சரியா அல்லது தவறா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் தொடர்ந்து இந்த நடவடிக்கையை செய்தால் கண்டிப்பாக பொதுமக்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நடவடிக்கையை வீடியோ எடுத்து யூடியூப் இணையதளத்திலும் பதிவு செய்துள்ளோம்.