ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல்ஸ் 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பெங்களூர் ரோயல்ஸ் அணிசார்பாக யுவராஜ் சிங், டி வில்லியர்ஸ் ஆகியோர் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். யுவராஜ் சிங் 38 பந்துகளில் 83 ஓட்டங்களையும் டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்றனர்.
இந்நிலையில், 192 என்ற வெற்றியிலக்கை நோக்கி ராஜஸ்தான் ரோயல்ஸ் துடுப்பெடுத்தாடியது. ஒரு கட்டத்தில் பெங்களூர் ரோயல்ஸிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 14 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு106 ஓட்டங்களை பெற்று இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
இன் நிலையில் ஸ்மித், ஜேம்ஸ் போக்னர் ஜோடி இணைந்தது இருவரும் ஆறு, நான்கு என வானவேடிக்கை காட்டினர்.
ஸ்மித் 21 பந்துகளில் 48 ஓட்டங்களையும் போக்னர் 17 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்று ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 18.5 ஓவர்களில் தனது வெற்றி இலக்கை அடைந்தது.