Site icon ilakkiyainfo

இறந்துபோன தாய் யானையை பிரிய மறுத்த 5 மாத குட்டியானை. நெகிழ வைக்கும் வீடியோ

ஐந்து மாத யானைக்குட்டி ஒன்று தனது இறந்துபோன தாய் யானையை விட்டு பிரிய மறுத்த நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று கென்யாவில் நடந்துள்ளது.

கென்யாவில் உள்ள David Sheldrick Wildlife Trust என்ற அமைப்பின் பாதுகாப்பில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும் வளர்ந்து வந்தது. நேற்று முன் தினம், அந்த தாய் யானை இறந்துவிட்டது.

இறந்த தாய் யானையை அடக்கம் செய்யவிடாமல், குட்டி யானை தாயின் உடல் மீது படுத்துக்கொண்டு, எழ மறுத்ததால், பலமணி நேரம் மீட்புப்படையினர் போராடி குட்டியானையை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த நெகிழ வைக்கும் காட்சியை பலர் நேரடியாக பார்த்தனர்.

மீட்புப்படையினரால் பிரிக்கப்பட்ட அந்த ஐந்து மாத குட்டி யானை பின்னர் Nairobi National Park என்ற இடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னரும் அந்த குட்டியானை சாப்பிடாமல் சோகமாக இருந்ததாகவும், அதன் பின்னர் Nairobi National Park ஊழியர்கள் குட்டியானைக்கு பலவந்தமாக உணவுகளை ஊட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த வீடியோ ஒன்று கடந்த சிலமணி நேரங்களாக யூடியூப் இணையதளத்தை கலக்கிக்கொண்டிருக்கின்றது. தேடிப்பார் வாசகர்களுக்காக அந்த வீடியோ இதோ…

Exit mobile version