முடிந்து போன அத்தியாயமல்ல
நம்மவர் மூச்சுக்காற்றில்
கலந்து நிற்கும் வலி(ழி)யின் புத்தகம்.
புது மாத்தளன்
புரட்டிப் போட்ட பக்கங்கள்
நம்மவர் இதயங்களில் நிலையாக
இருண்டு போய் இருக்கும் ரணங்கள்!
கலைந்து போகும்
மேகக்கூட்டம் போல
ஒரு மனிதக்கூட்டம் கரைந்து போன
சாட்சிகளில் இருந்து எழுதுகிறேன்!
சொல்லனா துன்பங்கள்
சங்கிலித் தொடராக தொடரும் போதும்
நிறுத்தப்பட்ட உங்கள் மூச்சுக்களை
நாங்கள் சுவாசிக்க ஆரம்பித்துள்ளோம்
மூன்று தசாப்த்தங்களின்
முழு வீரியத்தையும் விழுங்கிச்சென்ற
முள்ளிவாய்க்கால்,புதுமாத்தளன்
மாற்றத்திற்கான முள்ளுள்ள நினைவேந்தல்!
புத்தபகவானின் நெறிமறந்த
பக்ஸப் புத்திரர்களின் ஈனப் படுகொலைகள்
வலி(ழி)யும், கண்ணீரும் தந்து நின்றாலும்-மாறாக
தோல்வியின் தன்மையை உணரத்தந்துள்ளது!
போராடுவதற்காக ஒன்றுபடுவோம்
ஒன்று படுவதற்காக போராடுவோம்
உறைந்துகிடக்கும் உங்கள் குருதியில்
சபதம் ஏற்கின்றோம் உங்கள் மரணம் முடிவல்ல!
*சந்துரு*