சிம்ரன், அசின், த்ரிஷா, தமன்னா, காஜல்அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு இன்னமும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், நயன்தாராவுக்கு அது ஒரு முறை அல்ல, பல முறை கிடைத்து விட்டது.
முதன்முதலில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜியில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியுடன் நடனமாடினார்.
அதன்பிறகு பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த குசேலன் படத்தில் ரஜினி நடிகராகவே நடிக்க, நயன்தாராவும் நடிகை வேடத்திலேயே நடித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது அஜீத், ஆர்யா, சிம்பு, ஜெயம்ரவி, சூர்யா என்று நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா ரஜினி நடிக்கும் லிங்காவிலும் நடிக்கிறாராம்.
இந்த படத்தில் ஏற்கனவே இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் இருந்தபோதும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாடல் காட்சியில் ரஜினியுடன் தோன்றுகிறாராம் நயன்தாரா.
எந்த படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில்லை என்று கட்டுப்பாட்டை கடைபிடித்து வரும் நயன்தாரா, ரஜினி படம் என்பதால் அந்த கட்டுப்பாட்டை முதன்முறையாக தளர்த்தியிருக்கிறார்.
அனுஷ்காவின் திண்டாட்டம்!
தமிழில் இரண்டாம் உலகம் திரைப்படத்தை முடித்து விட்டு ஆந்திராவுக்கு சென்ற அனுஷ்காவை, ராணி ருத்ரம்மாதேவி திரைப்படத்துக்காக 6 மாதத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.
அதையடுத்து பாகுபாலி திரைப்படத்துக்காக ராஜமவுலியும் 6 மாதம் ஒப்பந்தமிட்டு தனது காவலிலேயே அனுஷ்காவை வைத்திருக்கிறார்.
இந்த நேரத்தில்தான் அஜீத்தின் 55ஆவது திரைப்பட வாய்ப்பும், ரஜினியின் லிங்கா திரைப்பட வாய்ப்பும் அனுஷ்காவை தேடிச்சென்றது. கடந்த 8 வருடங்களாக போராடிப் கிடைக்காத வாய்ப்பு இப்போது வாசல் கதவை வந்து தட்டுகிறபோது விட்டு விடுவாரா அனுஷ்கா? எப்படியோ ராஜமவுலியிடம் மன்றாடி இந்த இரண்டு திரைப்படங்களிலுமே நடிக்க அட்வான்ஸ் வாங்கி விட்டார்.
ஆனால், மொத்த கால்சீட்டாக கொடுக்கவில்லை. ராஜமவுலி இடையிடையே கொடுக்கிற இரண்டொரு நாள் ஓய்வைதான் இந்த திரைப்படங்களுக்கு பிச்சி பிச்சி கொடுத்திருக்கிறாராம்.
அதனால்தான், அஜீத்தின் திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொண்டு சில நாட்கள் நடித்துக்கொண்டிருக்கும் போண்து, ராஜமவுலியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து பாகுபாலிக்கு அழைக்கிறார்கள் என்று கௌதம் மேனனின் காது கடித்தாராம் அனுஷ்கா.
இந்த நிலைமையை சமாளிக்க நினைத்த இயக்குநர் கௌதம் மேனன், ரசிகர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. அதனால், இனி அவுட்டோரில் படப்பிடிப்பு வேண்டாம். இன்டோரிலேயே படப்பிடிப்பை நடத்தலாம் என்று அஜீத்திடம் சொன்னாராம். அத்துடன், அனுஷ்காவுக்காகவே படப்பிடிப்பையும் நிறுத்திவிட்டாராம்.
ஆனால், இந்த படப்பிடிப்பு அனுஷ்காவுக்காக நிறுத்தப்பட்டது என்ற விடயம் அஜீத்தின் காதுக்கு சென்றபோது கோபமாகி விட்டாராம் அஜீத்.
இதையடுத்து கௌதம்மேனனை தொடர்பு கொண்டவர், இது போகட்டும், இன்னொரு தடவையும் இதே மாதிரி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அனுஷ்கா போகக்கூடாது. அது உங்க பொறுப்புதான் என்று தனக்கே உரிய கடுமையை நிதானமாக கூறினாராம் அஜீத்.
இந்த செய்தி லிங்கா படக்குழுவுக்கும் செல்ல, அவர்களும் அனுஷ்கா விடயத்தில் முன்கூட்டியே உஷாராகியிருக்கிறார்களாம்.